Advertisment

வனிதா-ஷெரின்! முடி-பிடி ஃபைட்!

/idhalgal/cinikkuttu/vanitha-sherwin-hair-hold-fight

75-ஆவது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் "பிக்பாஸ்-3.' இப்பொழு தெல்லாம் சினிமா எடுக்கும்வரை சிவனே என இருந்துவிட்டு, ரிலீஸ் நேரத்தில், இந்தப் படத்தின் கதை என்னுடையது என புகார் கிளப்பி கோர்ட்டுக்குப் போவார் ஒரு பார்ட்டி. அந்தக் கதைக்குச் சொந்தக்காரர் அவர்தான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் தீர்ப்பளிக்கும்.

Advertisment

அப்படி கதை திருட்டு சமாச்சாரத்தில் மாட்டிக்கொண்ட படம் விஜய்யின் "கத்தி'-யும் சமீபத்தில் ரிலீசான "ஜெயம்'ரவியின் ‘"கோமாளி'-யும். உண்மையான கதாசிரியருக்கு திரைமறைவில் வெயிட்டாக செட்டில் பண்ணி விடுவார்கள். இப்படியும் படங் களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்.

Advertisment

ஏன்? இதே "பிக்பாஸ்-3'-யை நடத்தும் கமலிலின் "விஸ்வரூபம்' படத்திற்கு ""நாட்டைவிட்டே கிளம்பப் போறேன்'' என்ற சூப்பர் பப்ளிசிட்டியால் 200 கோடி ரூபாயை அள்ளியது அந

75-ஆவது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது விஜய் டி.வி.யில் கமல் நடத்தும் "பிக்பாஸ்-3.' இப்பொழு தெல்லாம் சினிமா எடுக்கும்வரை சிவனே என இருந்துவிட்டு, ரிலீஸ் நேரத்தில், இந்தப் படத்தின் கதை என்னுடையது என புகார் கிளப்பி கோர்ட்டுக்குப் போவார் ஒரு பார்ட்டி. அந்தக் கதைக்குச் சொந்தக்காரர் அவர்தான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் தீர்ப்பளிக்கும்.

Advertisment

அப்படி கதை திருட்டு சமாச்சாரத்தில் மாட்டிக்கொண்ட படம் விஜய்யின் "கத்தி'-யும் சமீபத்தில் ரிலீசான "ஜெயம்'ரவியின் ‘"கோமாளி'-யும். உண்மையான கதாசிரியருக்கு திரைமறைவில் வெயிட்டாக செட்டில் பண்ணி விடுவார்கள். இப்படியும் படங் களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்.

Advertisment

ஏன்? இதே "பிக்பாஸ்-3'-யை நடத்தும் கமலிலின் "விஸ்வரூபம்' படத்திற்கு ""நாட்டைவிட்டே கிளம்பப் போறேன்'' என்ற சூப்பர் பப்ளிசிட்டியால் 200 கோடி ரூபாயை அள்ளியது அந்தப் படம்.

கமல் நடத்துவதால் தானோ என்னவோ, இப்போதைய "பிக்பாஸ்' வீட்டிற்குள் நடக்கும் ஏடாகூட சம்பவங்கள், சட்டை கிழியும் அளவு சண்டைகள், வார்த்தைப் போர்கள் இவற்றால் "பிக்பாஸ்-3'-க்கு எக்குத் தப்பாகவும் பப்ளிசிட்டி கிடைக்கிறது. நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டுவதால், ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச்செல்வது யாராக இருக்கும் என பொதுமக்களும் ரொம்பவே ஆர்வமுடன் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். அதனால் தான் ""இன்னும் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து'' என்ற ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர் "பிக்பாஸ்' நிகழ்ச்சியாளர்கள்.

"பிக்பாஸ்-3' ஆரம்பித்தபோது மொத்தம் 16 போட்டியாளர்கள் இருந்தனர். இரண்டாவது வாரத்திலிலிருந்து வெளியேற்றுதல், வெளியேற்றப் படுதல் அடிப்படையில் ஒன்பது பேர் கழித்துக்கட்டப்பட்டு, இப்போது டைரக்டர் சேரன், நடிகை ஷெரின், முகிலன், தர்ஷன், கவின், லாஸ்லியா, சாண்டி என ஏழு போட்டியாளர்கள்தான் "பிக்பாஸ்' வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த இதழ் "சினிக்கூத்து' கடைகளில் கிடைக்கும்போது யார் யாரெல்லாம் வெளியேறி னார்களோ?

"பிக்பாஸ்' வீட்டிற்குள் இரண்டுமுறை போலீஸ் புகுந்து பரபரப்பாக்கினார்கள் என்றால், காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கும் விருந்தாளியாக மீண்டும் "பிக்பாஸ்' வீட்டிற்குள் நுழைந்த வனிதாவிற்கு மிடையே வாக்குவாதம் முற்றி, மதுமிதா கத்தியால் கையைக் கிழிக்கும் அளவுக்குப் போனது. மதுமிதா வெளியேற்றப் பட்டார்.

vanitha

மூன்று வாரங்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரியை "பிக்பாஸி'-ன் ரகசிய அறைக்குள் ஒருநாள் இருக்கச் சொன்னார்கள். இதை ஏற்க மறுத்ததால் கஸ்தூரி வெளியேற்றப் பட்டார். கஸ்தூரிக்கு முன்பே வெளியேறிய அபிராமி, சாக்ஷி அகர்வால், மோகன் வைத்யா ஆகியோர், கடந்த வாரம் மீண்டும் விருந் தினர்களாக "பிக்பாஸ்' வீட்டிற் குள் என்ட்ரியானார்கள்.

இதற்குமுன்பு நடந்த இரண்டு "பிக்பாஸ்' நிகழ்ச்சி களிலும், "பிக்பாஸ்' வீட்டைவிட்டு ஒருவர் வெளியேறினால், வேறொரு பிரபலத்தைத்தான் போட்டி யாளராக உள்ளே அனுப்பி னார்கள். ஆனால் இந்தமுறை ஏடாகூட சம்பவங்கள் ஏராளமாக நடப்பதால், புதிய போட்டியாளர்கள் யாரும் உள்ளே வரவில்லை. அதனால் தான் வனிதாவிற்கு ஏற்கெனவே பேசிய vvvசம்பளத்தைவிட கூடுதலாக சில ஆயிரங்களை சம்பளமாகப் பேசி விருந்தினராக உள்ளே வரவைத்து, போட்டியாளராக்கிவிட்டார்கள்.

வாங்கும் சம்பளத்திற்கு அதிகமாகவே "பிக்பாஸ்' வீட்டிற்குள் அதிகமாகவே ரவுசு பண்ணி ரவுண்டு கட்டுகிறார் வனிதா.

அவர் பாஷையிலேயே சொல்றதுன்னா பஜாரி ரேஞ்சுக்கு இறங்கி அடிக்கி றார். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட ஷெரினும் வனிதாவும் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்ட கண்றாவி யெல்லாம் நடந்ததாம். இதையெல்லாம் கேள்விப் பட்டு கடுப்பாகித்தான், "பிக்பாஸ்' வீடிருக்கும் போலீஸ் லிலிமிட்டில் வரும் நசரத்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரு நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றைக் கொடுத்தார் ஜாங்கிரி மதுமிதா.

""பிக்பாஸ் போட்டியில் 100 நாட்கள் கலந்துகொண்டு வெற்றிப் பரிசை பெறவேண்டும் என நினைத்தேன்.

ஆனால் 56-ஆவது நாளில், தமிழ்ப் பற்று குறித்த எனது கருத்தை தெரிவித்தற் காகவும் சக போட்டியாளர்களின் ஹராஸ்மெண்ட் குறித்தும் "பிக்பாஸ்' ஒருங்கிணைப்பாளரிடமும் நிகழ்ச்சியை நடத்தும் கமலிலிடமும் சொன்னேன்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனமும் டி.வி. யும் எனக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, என்னைப் பற்றி தவறான விமர்சனங்களை பரப்புகிறது. எனவே அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இதுதான் மதுமிதா அளித்துள்ள புகார்.

நாம் மதுமிதாவைத் தொடர்பு கொண்டபோது, “""புகாரில் இருப்பது அத்தனையும் உண்மை. இப்போது எனது உடல்நிலை சரியில்லை. இன்னும் பல உண்மைகளை சொல்லத்தான் போகிறேன் என்றார்.

-ஈ.பா. பரமேஷ்வரன், அரவிந்த்

cini170919
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe