நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தாரு இளையதிலகம் பிரபுவோட மகன் ஜுனியர் திலகம் விக்ரம்பிரபு. என்ன ஆச்சோ ஏது ஆச்சோ "பக்கா' படம் ஆரம்பிச்சு பத்தே நாள்ல பஞ்சாயத்தக் கூட்டிட்டாரு.
பாரதிராஜா உட்பட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி, துணை, இணை இயக்குநராகப் பணியாற்றியவர் எஸ்.எஸ். சூர்யா. 25 வருட கோடம்பாக்க போராட்டத்துக்குப்பின் மலேசியா பார்ட்டியான தயாரிப்பாளர் டி. சிவக்குமாரைப்புடிச்சி, அவர்மூலம் விக்ரம்பிரபுவிடம் கதை சொன்னார் சூர்யா. விக்ரம்பிரபுவுக்கு கதைப்பிடித்துப் போக றுவிறுவென வேலைகளைத் தொடங்கினார் தயாரிப்பாளர் சிவக்குமார். ஷூட்டிங் ஆரம்பிச்சு பத்து நாள் வரைக்கும் பக்காவா போய்க்கிட்டிருந்துச்சு. பதினோராவது நாள்ல இருந்து டைரக்டர் ஒரு லுக்குல நிக்கச் சொன்னாஏடாகூடமா நிக்குறது, நோக்கத்துக்கு வசனம் பேசுறதுன்னு லொள்ளு பண்ண ஆரம்பிச்சிருக்காரு விக்ரம்பிரபு.
தயாரிப்பாளர் பதறிப்போய் கேட்டதுக்கு, இவருக்கு டைரக்ஷன் பண்ணத் தெரியல, வேற ஆள் டைரக்ட் ண்ணுனா நடிக்கிறேன்னு விக்ரம்பிரபு சொல்லிருக்காரு. விவகாரம் அப்பா பிரபுவுக்குப் போக, அவர்விசாரித்த வகையில், டைரக்டர் நல்ல திறமைசாலின்னு தெரிஞ்சுக்கிட்டு, மகனைக்கூப்பிட்டு சத்தம் போட்டாராம்.
இதனால் மேலும் கடுப்பான விக்ரம்பிரபு, செம குடைசல் கொடுக்க ஆரம்பிச்சுட்டாராம். ஒரு கட்டத்துல மனம் வெறுத்துப்போன டைரக்டர் சூர்யா, தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு கதறி அழுக ஆரம்பிச்சுட்டாராம்.
ஒருவழியா படம் முடிஞ்சு ஆடியோ ரிலீஸ்வரைக்கும் வந்திருச்சு. ஆனா ஹீரோ விக்ரம்பிரபுரிலீஸ் ஃபங்ஷனுக்கு வராம எல்லாரையும் வெறுப்பேத்திட்டாரு. அவரால வரமுடியலன்னு ஹீரோயின் நிக்கி கல்ராணி மைக்கில் சொன்னார்.
விக்ரம்பிரபு வெறுப்பேத்தினாலும் ஃபங்ஷனுக்கு வந்த நிக்கி கல்ராணி, செம தூக்கலாநம்ம சீஃப் போட்டோ கிராபருக்கு போஸ் கொடுத்து சூப்பர் ஜில் ஏத்தினார்.
அந்த ஜில் ஸ்டில்ஸ்தான் இங்கே உங்க கண்களுக்கு கூல் விருந்தாக.