""ஸ்ரீரெட்டி விஷயத்தை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன். இந்த விஷயம் எனக்கு பெரிதல்ல. நான் அதைப்பற்றி கவலைப் படவில்லை. ஆனால் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விஷயம் குறித்து தெளிவுபடுத்தும்படி கேட்பதால், அனைவருக்கும் தெளிவு படுத்துவதற்கான நேரம் இதுவென நினைக்கிறேன். தெலுங்கு "ரிபெல்' படத்தின்போது ஸ்ரீரெட்டி என்னைச் சந்தித்ததாகக் கூறியிருக்கிறார். அந்தப் படம் வந்து ஏழாண்டுகள் ஆகி விட்டன. ஏழு வருடங்களாக இந்த விஷயத்தைக் குறித்துப் பேசாமல் என்ன செய்தார்? சரி; அதைவிட்டுவிடலாம். அவர் ஹோட்டலில் என் அறைக்கு வந்ததாகவும் நான் அவரைப் பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார்.

srireddy

""ருத்ராட்சம் இல்லை'' மேலும் அவர் என் அறையில் கடவுள் படங்களையும் ருத்ராட்ச மாலையையும் பார்த்ததாகக் கூறுகிறார். நான் ஹோட்டல் அறையில் ருத்ராட்ச மாலை வைத்துப் பூஜை பண்ணும் அளவுக்கு முட்டாளல்ல. நான் நேரடியாக ஸ்ரீரெட்டிக்குக் கூறுகிறேன் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னை எனக்குத் தெரியும். கடவுளும் என்னை அறிவார். அனைத்துக்கும் மேலாக நான் ரெட்டிமேல் கோபமாக இல்லை. நான் உனது பேட்டிகளை எல்லாம் பார்த்துள்ளேன். உன்மீது பரிதாபம்தான் உள்ளது. உண்மையில் உனது பிரச்சினைதான் என்ன? எல்லாரும் வாய்ப்புத் தருவதாகக் கூறி உன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதுதானே உன் பிரச்சினை?

Advertisment

""நடிச்சுக்காமி பார்ப்போம்'

srireddy

நீங்கள் ஒரு நல்ல நடிகை என கூறுகிறீர்கள். நாம் ஒன்று செய்யலாம். நான் ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்கிறேன். நீயும் அதில் கலந்துகொள்ளலாம். செய்தியாளர்களுக்கு நடுவில் நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் தருகிறேன். நடிப்பதற்கு ஒரு காட்சியும், சில நடனக் காட்சிகளும் தருகிறேன். நான் பண்ணுவதுபோல் கடினமான நடனக் காட்சி அல்ல. நான் எளிமை யான வசனங்களும் நடன மூவ்மெண்டுகளும் தருகிறேன். ஒரு நடிகை கொண்டிருக்கவேண்டிய அளவுக்கான அடிப்படையான தகுதிகளுக்கு ஏற்றபடி அவை lawaranceஇருக்கும். உண்மையிலே உங்களுக்குத் தகுதியிருந்தால் என் முன்பும் செய்தியாளர்கள் முன்பும் நடித்துக் காண்பி. நீ நன்றாக நடித்துக் காண்பித்ததாக ஒரு இயக்குநராக நான் உணர்ந்தால், என்னுடைய அடுத்த படத்தில் உனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதோடு அட்வான்ஸும் தருகிறேன்.

""பயமா... எனக்கா'' நான் எந்தத் தவறும் செய்ய வில்லை. அதனால் உன்னை நேரடியாக எதிர்கொள்ள எந்தப் பயமும் இல்லை. என் படத்தில் நடிப்பதனால்… ஒருவேளை நிறைய வாய்ப்புகள் வரலாம். ஒருவேளை அனைவரின் முன்பும் நடிக்கத் தயக்கமாக உணர்ந்தால் எனது மேனேஜரைத் தொடர்புகொள். உனது வழக்கறி ஞர் அல்லது நலம் விரும்பியுடன் வந்து என்னிடம் உனது திறமை யைக் காண்பி. நிச்சயமாக நான் உனக்கு உதவுவேன். நான் பயந்துபோய் இந்தப் பதிலைச் சொல்லவில்லை. பெண்களை நான் பெரிதும் மதிப்பவன் என்பதால் இதைச் சொல்கிறேன். மதிப்பதனால் தான் நான் என் அம்மாவுக்கு ஒரு கோவில் கட்டி அதனை அனைத்துப் பெண்களுக்காக சமர்ப்பித்தேன். நாம் நல்ல விஷயங்களைப் பேசுவோம். நல்ல விஷயங்களைச் செய்வோம். உனது நல்வாழ்வுக் காக நான் பிரார்த்திக்கிறேன்.'' இப்படியெல்லாம் ஸ்ரீரெட்டிக்கு சவால்விட்டார் ராகவா லாரன்ஸ்.

""சவாலை சந்திக்க நான் ரெடி! சொன்னபடி செய்ய ராகவா லாரன்ஸ் ரெடியா?'' எனக் கேட்டு அதிர வைக்கிறார் ஸ்ரீரெட்டி.

அடங்காத ஸ்ரீரெட்டி, தன்னிடம் படுத்தவர்களின் அடுத்த பட்டியலை ரிலீஸ் பண்ண ரெடியாகிவிட்டார். கோடம்பாக்க சினிமாப் புள்ளிகள் அலற ஆரம்பித்து விட்டனர்.

-ஈபா. பரமேஷ்வரன்