உதயநிதி- தமன்னா காம்பினேஷனில், சீனுராமசாமியின் டைரக்ஷனில் "கண்ணே கலைமானே' படம் கடந்த 22-ஆம் தேதி ரிலீசானது. அந்தப் படத்தின் பத்திரிகை யாளர்கள் சந்திப்பில், மேடையில் இருந்தவர்களின் பெயர்களை வரிசையாக சொல்லிலிக்கொண்டே வந்தார் தொகுப்பாளினி கவிதா.
உதயநிதி பெயரைச் சொல்ல வந்தபோது ""வருங்கால என... கவிதா ஆரம்பித்ததும்'' பதறியபடி எழுந்துவந்த உதயநிதி, கவிதாவின் கையில் இருந்த பேப்பரை பிடுங்க, அசராத கவிதாவோ, "பேப்பர் போனா என்ன, மனப்பாடமா வச்சிருக்கோம்ல' என்றபடி மைக்முன் போக, மைக்கையும் பொத்தினார் உதயநிதி. அப்போது நமது ஸ்டில் ஃபோட்டோகிராபர் க்ளிக்யதுதான் இங்கே.
-ஸ்டில்ஸ்:எஸ்.பி.சுந்தர்