தாரணி டாக்கீஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கே. துரை வசந்த் இயக்கத்தில் உருவாகும் படம் "உன்னை பாக்காமலே.' இதில் ஹீரோவாக புதுமுகம் அருண்ஹாசன் நடிக்கிறார். ஹீரோயின்களாக சுகன்யா
தாரணி டாக்கீஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கே. துரை வசந்த் இயக்கத்தில் உருவாகும் படம் "உன்னை பாக்காமலே.' இதில் ஹீரோவாக புதுமுகம் அருண்ஹாசன் நடிக்கிறார். ஹீரோயின்களாக சுகன்யா, சௌந்தர்யா ஆகியோர் அறிமுகமாகிறார் கள். ரகுமான்கான் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் சமூகசேவகர் எஸ்.எம். முருகன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். மற்றும் பாண்டு, நெல்லை சிவா, சாப்ளின் பாலு, விகடன், குள்ள சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விக்ரம் செல்வா இசையமைக்கும் இப்படத்திற்கு தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். இத்ரிஷ் எடிட்டிங் செய்ய, சண்டைக் காட்சிகளை ஜீவா வடிவமைக்கிறார். ராம் சுந்தர் நடனம் அமைக்க, ராம்ஜி கலையை நிர்மாணிக்கிறார்.
சிட்டி மற்றும் வில்லேஜ் என இரண்டு கதைக்களங்களிலும் உருவாகும் இப்படத்தின் கதை முக்கோண காதல் கதையாகும்.
மூணாறு, மறையூர், தென்காசி ஆகிய பகுதி களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களை சீர்காழி சிற்பி மற்றும் மோகன் ராஜ் எழுதியுள்ளார்கள்.