Advertisment

தெலுங்கு கடைக்குட்டி சிங்கம்

/idhalgal/cinikkuttu/telugu-shopping-lion

தெலுங்கில் "சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படம் தமிழில் "நெஞ்சமெல்லாம் பல வண்ணம்.' இதில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா ந

தெலுங்கில் "சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படம் தமிழில் "நெஞ்சமெல்லாம் பல வண்ணம்.' இதில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

babu

இயக்கம்- ஸ்ரீகாந்த். இவர் ஏற்கெ னவே புதுமுகங்களை வைத்து இயக்கிய "கொத்த பங்காரு லோகம்' அமோக வெற்றி பெற்றது.

வசனம் எழுதி தமிழாக் கம் செய்திருப்பவர் ஏ.ஆர்.கே. ராஜராஜா. படம் பற்றி ராஜராஜாவிடம் கேட்டோம்...

""தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீடு பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும்தான் என்கிற மாயையை இந்தப் படம் தகர்த்தெறிந்துள்ளது.

முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன்- தம்பிகளாக நடித்துள்ளனர். "கடைக்குட்டி சிங்கம்' படத்தைப் போலவே இந்தப் படத்தில் மகேஷ்பாபு "கடைக்குட்டி'யாக நடித்துள்ளார். தமிழில் "செல்வந்தன்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த "நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' இருக்கும். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்'' என்கிறார்.

Advertisment

cine040918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe