"ஸ்ரீரெட்டி டைரி' என்ற படத்திற்கு ஃபைனான்ஸ் பண்ணிய சுப்பிரமணியன், தனது வீட்டிற்குள் புகுந்து அடாவடி பண்ணிய தாக ஸ்ரீரெட்டி சொன்னதை கடந்த "சினிக்கூத்து' இதழில் எழுதி யிருந்தோம். ஃபைனான்சியர் சுப்பிரமணியனின் பதில்களை வரும் இதழில் வெளியிடுவதாக அந்த செய்தியில் கட்டம் கட்டி யிருந்தோம். கடந்த இதழைப் படித்ததும் நம்மைத் தொடர்பு கொண்ட சுப்பிரமணியன்., ஸ்ரீரெட்டியைப் பற்றி பொங்கித் தீர்த்துவிட்டார்.
"""ஸ்ரீரெட்டி டைரி'ங்கிற படம் எடுக்கப் போறோம், அதுக்கு நீங்க ஃபைனான்ஸ் பண்ணுங் கன்னு தயாரிப்பாளார் ரவி தேவன் கேட்டார். நானும் 47 லட்ச ரூபா ஃபைனான்ஸ் பண்ணுனேன்.
"ஸ்ரீரெட்டி டைரி' என்ற படத்திற்கு ஃபைனான்ஸ் பண்ணிய சுப்பிரமணியன், தனது வீட்டிற்குள் புகுந்து அடாவடி பண்ணிய தாக ஸ்ரீரெட்டி சொன்னதை கடந்த "சினிக்கூத்து' இதழில் எழுதி யிருந்தோம். ஃபைனான்சியர் சுப்பிரமணியனின் பதில்களை வரும் இதழில் வெளியிடுவதாக அந்த செய்தியில் கட்டம் கட்டி யிருந்தோம். கடந்த இதழைப் படித்ததும் நம்மைத் தொடர்பு கொண்ட சுப்பிரமணியன்., ஸ்ரீரெட்டியைப் பற்றி பொங்கித் தீர்த்துவிட்டார்.
"""ஸ்ரீரெட்டி டைரி'ங்கிற படம் எடுக்கப் போறோம், அதுக்கு நீங்க ஃபைனான்ஸ் பண்ணுங் கன்னு தயாரிப்பாளார் ரவி தேவன் கேட்டார். நானும் 47 லட்ச ரூபா ஃபைனான்ஸ் பண்ணுனேன்.
பணத்திற்கு ஈடாக சில பத்திரங்களையும், பி.எம்.டபிள்யூ காரை யும் எழுதி வாங்கினேன். இப்ப ஸ்ரீரெட்டி குடியிருக்கும் சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் வீட்டிற்கு எட்டு லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்து, மாதம் 32,000 வாடகையும் நான்தான் கொடுத்துக் கிட்டு வந்தேன். ரவிதேவன் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் படம் எடுக்குற மாதிரி தெரியல. ""என்னாச்சுங்க?''ன்னு கேட்டப்ப, ""இதோ ஆரம்பிச்சிருவேன்'' என்று இழுத்தவர், ""நீங்க ஓ.கே.ன்னா அவுங்களும் ஓ.கே.''ன்னு ஒரு மாதிரியா இழுத்தாரு. "எதிரிகளுடன் உட்கார்ந்து நான் எப்படி தண்ணி அடிப்பேன்?'னு ஸ்ரீரெட்டி உங்களிடம் கேட்டிருந்தாரு. இந்த ஃபோட்டோக்களையெல்லாம் பார்த்தா, நானும் ஸ்ரீரெட்டியும் எதிரிகள் மாதிரியா தெரியுது? நான் பணம் கேட்டு நெருக்க ஆரம்பித்ததும், ரவிதேவன் மூலமா வேறொரு டெக்னிக்கைக் கையாள ஆரம்பித்தார் ஸ்ரீரெட்டி.
அதுக்கு முன்னால இன்னொரு கதைய சொல்றேன்.
தெலுங்கானா மாநிலம், மாதப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக் கும் ராமகிருஷ்ணாவுக் கும் ஸ்ரீரெட்டிக்கும் ரொம்பவே நெருக்கம். ஒரு நாள் அந்த இன்ஸ் பெக்டர் ஸ்ரீரெட்டி யுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதை, செல்ஃ போனில் வீடியோ எடுத்து மேல்மட்ட போலீஸ் அதிகாரி களுக்கு அனுப்பி, ராம கிருஷ்ணாவிடமே பணத்தைப் பறித்தவர் தான் இந்த ஸ்ரீரெட்டி. இதே போல் நடிகர் ராணா வின் தம்பியுடன் செக்ஸ் வைத்தபோது, அதை ராணாவின் தம்பியும் செல்ஃபோ னில் எடுத்து வைத்துக் கொண்டார். இதை மோப்பம் பிடித்த ஸ்ரீரெட்டி, தனது கையாளை ராணாவின் தம்பி வீட்டிற்கே அனுப்பி, அந்த செல்ஃபோனை திருடி, ராணாவின் தம்பியை பிளாக்மெயில் பண்ணி ஒன்றரை கோடி ரூபாய் பறித்தார்.
ஆந்திர சினிமாவிற்கும் நான் ஃபைனான்ஸ் செய்வதால் இந்த விவரங்களெல்லாம் தெரியும். ஒட்டுமொத்த ஆந்திராவே ஸ்ரீரெட்டிக்கு எதிராகத் திரும்பி, ஆந்திராவைவிட்டே துரத்திய போது, நள்ளிரவு ஒரு மணிக்கு நான்தான் சென்னைக்கு அழைத்து வந்து பாதுகாப்பு கொடுத்தேன். ஆனா அதே ஆந்திரா போலீசிடம் என்னைச் சிக்கவைத்து 100 நாள் ஜெயிலில் தள்ளினார் ஸ்ரீரெட்டி. சில போலீஸ் அதிகாரிகள் அவரின் கைக்குள் இருப்பதால், சிறையில் என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.
நான் ஆந்திரா ஜெயில் இருந்தபோதுதான் ஃபைனான் சுக்கு எழுதி வாங்கிய பி.எம்.டபுள்யூ காரை எனது வீட்டில் இருந்து திருடிக்கொண்டு போய் விட்டார். இதைவிடக் கொடுமை என்னன்னா வாடகைக்கு எடுத்த பென்ஸ் காரையே அடமானம் வச்சு பணம் வாங்கிய சாகசக்காரி தான் ஸ்ரீரெட்டி. அவரின் வண்ட வாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி சந்தி சிரிக்கவைத்து சென்னையவிட்டே ஓடவிடுவேன் பாருங்க'' என்று ஆவேசமானார் ஃபைனான்சியர் சுப்பிரமணியன்.