"ஒரு நாள் கூத்து' மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
கோவில்பட்டி சொந்த ஊர் என்றாலும் வளர்ந்தது, படித்தது, மாடலிங் பண்ணியதெல்லாமே துபாய்தான். பெரிய ஹீரோக்களுடன் ஜோடிபோட வேண்டுமென்ற பெத்துராஜின் ஆசை மட்டும் நிறைவேற மாட்டேங்குது. ஜெயம் ரவியுடன் ஜோடி போட்டு சமீபத்தில் ரிலீசான "டிக் டிக் டிக்'-கும் சுமாரான ரிசல்ட்தான். இப்போது பிரபுதேவாவுடன் ஜோடிபோட்டு நடித்து வரும் "பொன். மாணிக்கவேல்', அடுத்ததாக கார்த்தியுடன் ஒரு படம். இதைத் தவிர நிவேதாவின் கைவசம் படங்கள் எதுவுமில்லை. அதனால கோலிவுட் டிலேயே பொழப்பு தழப்பைப் பார்க்கலமா, இல்ல துபாய்க்கே திரும்பி போயிரலாமான்னு நிவேதாவின் மனசு நிலை கொள்ளாமல் தவிக்குதாம்.