"பொட்டு' படத்தை முடித்துவிட்ட டைரக்டர் வி.சி. வடிவுடையானின் அடுத்த படம் "வீரமாதேவி.' வரலாற்றுப் பின்னணி கொண்ட இப்படத்தில் வீரமாதேவி எனும் ராணியாக ரவுண்டு கட்டவருகிறார் சன்னி லியோ
"பொட்டு' படத்தை முடித்துவிட்ட டைரக்டர் வி.சி. வடிவுடையானின் அடுத்த படம் "வீரமாதேவி.' வரலாற்றுப் பின்னணி கொண்ட இப்படத்தில் வீரமாதேவி எனும் ராணியாக ரவுண்டு கட்டவருகிறார் சன்னி லியோன். ராணி வேஷம் என்பதால், அமெரிக்காவில் குதிரை ஏற்றப்பயிற்சி, வாள்வீச்சுப் பயிற்சிகளை கர்ம சிரத்தையாகக் கற்றுவருகிறார் சன்னிலி லியோன்.
அதுமட்டுமல்ல மக்களே, தமிழர்களின் காதுகளில் இன்பத்தேன் பாயும் செய்தி ஒண்ணு. நம்ம தமிழின் பெருமையைத் தெரிந்துகொண்ட சன்னி, இப்போது அதிதீவிரமாக தமிழ் கற்று வருகிறாராம். சன்னிக்குத் தமிழ் கற்றுக் கொடுப்பதற்காக ஆசிரியை ஒருவரை நியமித்துள்ளாராம் வடிவுடையான். மும்பையில் இந்திப் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும், தமிழ் ஆசிரியையை வரவழைத்து தமிழ் வகுப்பு எடுக்கச் சொல்றாராம் சன்னி. "" "வீரமாதேவி'-க்கு 150 நாட்கள் மொத்தமா கால்ஷீட் கொடுத்திருக்கும் சன்னி, இப்படத்திற்கு தனது சொந்தக் குரலிலில் தமிழிலேயே டப்பிங் பேசினாலும் ஆச்சர்யமில்லை'' என ரொம்பவே புளங்காகிதப்பட்டார் வி.சி. வடிவுடையான்.