மிழ் சினிமாவின் கதைக் களஞ்சியமாக இருப்பவர் கலைஞானம். "பைரவி' படம் மூலம் வில்லன் ரஜினியை ஹீரோவாக அறிமுகம் செய்து, சூப்பர் ஸ்டாராக்கியவர் கலைஞானம். அப்பேர்ப்பட்ட கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்ட்- 14-ஆம் தேதி சென்னையில் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானத் திற்கு சொந்த வீடு வாங்கிக் கொடுக்கப்போவதாக அறிவித்தார்.

kalaiganam

விழா முடிந்த மறுநாள், கலைஞானத்தைத் தொடர்பு கொண்ட ரஜினி, "" "தர்பார்' பட ஷூட்டிங்கிற்காக மும்பை போறேன். வர்றதுக்கு ஒரு மாசமாகும். அதுக்குள்ள வீடு பார்த்து வைங்க'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதுபோலவே, சென்னை விருகம்பாக்கத்தில் 1320 சதுர அடியில் மூன்று பெட்ரூம் கொண்ட ரூ. ஒரு கோடி மதிப்பிலான வீடு பார்த்து ஓ.கே. செய்தார் கலைஞானம்.

ஆயுதபூஜை தினமான கடந்த 8-ஆம் தேதி, கலைஞானத்தின் புது இல்லத்தில் குத்துவிளக்கேற்றி னார் சூப்பர் ஸ்டார்.

Advertisment

-ஸ்டில்ஸ்: எஸ்.பி. சுந்தர் & அசோக்