கோவாவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி
கோவாவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்பட்டது. விருதுபெற்றபின் பேசிய ரஜினி, ""என்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நன்றி. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், டெக்னீஷியன்கள், எனது ரசிகர்கள் ஆகியோருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.