சிம்புவிடம் சிக்கியவரின் கதை! NEW நியூஸ்!

/idhalgal/cinikkuttu/story-simbu-who-got-caught-new-news

சினிமா புரொஜெக்டரைக் கண்டு பிடித்த எட்வர்ட் மைபிரிட்ஜ், பிலிம் ரோலைக் கண்டுபிடித்த லுமியர் பிரதர்ஸ் ஆகிய இந்த மூணுபேரும் நல்ல வேளை... இப்போது உயிருடன் இல்லை. இருந்திருந்தால்... தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை சிம்பு படுத்தும் பாட்டைப் பார்த்து நொந்தே செத்திருப்பார்கள்!

ss

பிரசாந்த்- அங்கீதா, விஜயகுமார், ஸ்ரீவித்யா, மணிவண்ணன், கணவன்- மனைவியாக வடிவேலு, நளினி ஆகியோர் நடிப்பில் சுந்தர். சி. டைரக்ஷனில் "லண்டன்' என்ற படம் வந்தது. அதில் "வக்கீல் வெடிமுத்து'வாக காமெடியில் கலக்கியிருப்பார் வைகைப்புயல் வடிவேலு. ஒரு சீனில் நளினி, வடிவேலுவைக் கட்டிப்பிடிக்கும்போது, வடிவேலுவின் பாடி செம ஸ்பீடாக ஆடும். ""என்னய்யா நீ...! ஆசையா கட்டிப்பிடிக்கும்போதுகூட இப்படி நடுங்குற...?'' என நளினி கேட்கும் போது, ""அது ஒண்ணுமில்லமா... நீ ஆசை யாத்தான் கட்டிப் பிடிக்கிற! ஆனா...

எனக்கென்னமோ கருப்பு மிஷின்ல மாட்டுனமாதிரியே ஒரு ஃபீலிங்!'' என்பார் வைகைப்புயல்.

ss

அந்தக் கதைதான் சிம்புவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் கள், டைரக்டர் களின் நிலையும். ""ச்ச்சேசே... சிம்பு முன்னமாதிரி யெல்லாம் இல்ல! அவரு திருந்திட

சினிமா புரொஜெக்டரைக் கண்டு பிடித்த எட்வர்ட் மைபிரிட்ஜ், பிலிம் ரோலைக் கண்டுபிடித்த லுமியர் பிரதர்ஸ் ஆகிய இந்த மூணுபேரும் நல்ல வேளை... இப்போது உயிருடன் இல்லை. இருந்திருந்தால்... தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை சிம்பு படுத்தும் பாட்டைப் பார்த்து நொந்தே செத்திருப்பார்கள்!

ss

பிரசாந்த்- அங்கீதா, விஜயகுமார், ஸ்ரீவித்யா, மணிவண்ணன், கணவன்- மனைவியாக வடிவேலு, நளினி ஆகியோர் நடிப்பில் சுந்தர். சி. டைரக்ஷனில் "லண்டன்' என்ற படம் வந்தது. அதில் "வக்கீல் வெடிமுத்து'வாக காமெடியில் கலக்கியிருப்பார் வைகைப்புயல் வடிவேலு. ஒரு சீனில் நளினி, வடிவேலுவைக் கட்டிப்பிடிக்கும்போது, வடிவேலுவின் பாடி செம ஸ்பீடாக ஆடும். ""என்னய்யா நீ...! ஆசையா கட்டிப்பிடிக்கும்போதுகூட இப்படி நடுங்குற...?'' என நளினி கேட்கும் போது, ""அது ஒண்ணுமில்லமா... நீ ஆசை யாத்தான் கட்டிப் பிடிக்கிற! ஆனா...

எனக்கென்னமோ கருப்பு மிஷின்ல மாட்டுனமாதிரியே ஒரு ஃபீலிங்!'' என்பார் வைகைப்புயல்.

ss

அந்தக் கதைதான் சிம்புவை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் கள், டைரக்டர் களின் நிலையும். ""ச்ச்சேசே... சிம்பு முன்னமாதிரி யெல்லாம் இல்ல! அவரு திருந்திட்டார்னு அவரே சொன்னாரு...'' என ஆசை ஆசையாக படத்தை ஆரம்பிப் பார்கள். படம் ஆரம்பித்து பாதிக்கும்மேல போனபின் தெரியும், ""ஆத்தாடி சிக்கிட்டோமே,'' இனி எப்படி தப்பிக்கிறதுங்கறது!

"அன்பானவன் அசராதவன், அடங்காதவன்' அப்படினு ஒரு படத்தைத் தயாரித்தார் மைக்கேல் ராயப்பன். ஸ்ரேயா, தமன்னான்னு கலக்கல் காம்பினேஷனில் அந்தப் படத்தை எடுத்துட்டு கதிகலங்கிப் போய்ட்டாரு ராயப்பன். இன்னும் அந்தப் பட பஞ்சாயத்து முடிஞ்ச பாடில்லை.

நாராயண் நாகேந்திரன் என்ற டைரக்டர் "அரசன்' என்ற படத்தை டைரக்ட் பண்ண ஆரம்பித்தார். ஒரு நாளோ, ரெண்டு நாளோதான் ஷூட்டிங் நடந்திருக்கும். அப்புறம்... அப்புறம்... என்ன சிம்பு வழக்கம்போல் தனது திருகுஜால வேலைய ஆரம்பிச் சாரு. ""சிம்புவால எனக்கு ஒரு கோடி ரூபாய் நட்டம். இனிமே அவர வச்சு படமே எடுக்க மாட்டேன். அதனால அந்த ஒரு கோடி ரூபாயை அவரிட மிருந்து வாங்கிக் கொடுங்கய்யா''ன்னு சென்னை உயர்நீதிமன்றத்திடம் சரணடைந்தார் நாராயண் நாகேந்திரன்.

தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டுவதுபோல ஐகோர்ட்டுக்கும் தண்ணி காட்டலாம்னு பார்த்தார் சிம்பு. விடுமா கோர்ட்? ""பணத்தை செட்டில் செய்யலைன்னா, சிம்புவின் கார் உட்பட காஸ்ட்லியான பொருட்களை ஜப்தி பண்ணுங்க'' என்று அதிரடி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

"இது நம்ம ஆளு' படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுவதற்குள், கதறி அழும் நிலைக்குப் போய்விட்டார் பாண்டிராஜ். சிம்புவை வைத்து "மன்மதன்' படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்ப எங்கே இருக்கார்னு தெரியல! அதேபோல் "வேட்டை' படத்திற்கு முதலில் சிம்புவைத்தான் புக் பண்ணினார் டைரக்டர் லிங்குசாமி. ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகும் நேரத்தில் சேட்டையை ஆரம்பித்ததால், சிம்புவைத் தூக்கிவிட்டு, ஆர்யாவை புக் பண்ணி படத்தையும் எடுத்து முடித்துவிட்டார் லிங்கு.

ss

"வேட்டை மன்னன்' அப்படிங்கிற படத்தை 2016-ல் ஆரம்பித்தார், அஜீத்தை வைத்து பல ஹிட் படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. சிம்பு வுக்கு ஜோடி ஹன்சிகா. துபாயில் 15 நாட்கள் ஷுட்டிங் நடந்ததோடு சரி; படம் குளோஸ்! சக்கரவர்த்தி இப்ப எந்த முட்டுச் சந்துல இருக்காரோ?

இதேபோல் தனது "கோ' படத்திற்கு சிம்புவை வைத்து ஃபோட்டோ ஷுட்டெல்லாம் நடத்தினார் டைரக்டர் கே.வி. ஆனந்த். "விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு'ங்கிற கதையா... தெறித்து ஓடிய கே.வி. ஆனந்த்... ஜீவாவை ஹீரோவாகப் போட்டு படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணி ஹிட்டும் பண்ணிவிட்டார்.

இப்படியெல்லாம் எகிடுதகிடா போய்க் கொண்டிருந்த சிம்புவை வைத்து "வந்தா ராஜாவாத் தான் வருவேன்' (ம்க்கும்... டைட்டிலுக்கு ஒண்ணும் கொறச் சலில்ல) படத்தைத் தயாரித்தது லைக்கா கம்பெனி. சுந்தர் சி. டைரக்ஷனில் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு என மெகா நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். படமோ செமையா ஊத்திக்கிருச்சு!

ss

இதையெல்லாம் பார்த்தும் உஷாராகாமல் வலியப்போய் சிம்புவிடம் சிக்கினார் தயாரிப்பாளரும் டைரக்டருமான சுரேஷ் காமாட்சி. காவல்துறை யில் பெண் போலீஸ்கள் படும் கஷ்டத்தை அடிப்படையாக வைத்து "மிக மிக அவசரம்' என்ற படத்தை தயாரித்து டைரக்ட் பண்ணியிருந்தார் சுரேஷ் காமாட்சி. புதுச்சேரி தமிழச்சியான ஸ்ரீபிரியங்காதான் ஹீரோயின். அந்தப் படத்தை எடுத்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் சுரேஷ் காமாட்சி யால் ரிலீஸ் பண்ண முடியவில்லை!

இந்த சமயத்தில்தான் வெங்கட் பிரபு டைரக்ஷனில் சிம்பு- கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியில் "மாநாடு' படத்தை ஆரம்பிக்கப் போவதாக ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. "சிம்புவை வைத்து எடுக்கப்போகும் படம் சரிப்பட்டு வராது. சுரேஷ் காமாட்சிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை' என்று அப்போதே "சினிக்கூத்து' இதழில் எழுதியிருந்தோம்.

நமது செய்தியைப் பார்த்ததும் நம்மைத் தொடர்பு கொண்டார் சுரேஷ் காமாட்சி யின் பி.ஆர்.ஓ. ஜான். ""வளர்ந்து வரும் ஒரு தயாரிப்பாளரைப் பத்தி இப்படி எழுதிட்டீங்க ளேண்ணே...'' என்று ரொம்பவே வருத்தப்பட்டார். அடுத்த இதழிலேயே நாமும் வருத்தம் தெரிவித்திருந்தோம்.

simbu

"" "மாநாடு' படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது'' என்றார் சுரேஷ் காமாட்சி. அதன்பின், ""ஜூன் மாதம்'' என்றார். படம் கைவிடப்பட்டதாக மீடியாவில் செய்தி பரவ ஆரம்பித்ததும், ""அப்படியெல்லாம் இல்ல. மலேசியா விசா பிரச்சினைகள் இருக்கின்றன.

அதெல்லாம் சரியானபின் ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் கிளம்பிருவோம்'' என மறுத்த சுரேஷ் காமாட்சிதான், கடந்த 8-ஆம் தேதி சிம்புவுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, "மாநாடு' படம் கைவிடப்படுவதாக அறிவித்தார். ஆனால், ""வெங்கட் பிரபு டைரக்ஷனில் ஒரு படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' எனவும் சொல்லியிருக்கார் சுரேஷ் காமாட்சி.

நாம சொன்னா கோவிச்சுக்கிறாக! பட்டுத்தான் தெரிஞ்சுக்கிறாக...

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine200819
இதையும் படியுங்கள்
Subscribe