சினிமாவில் நடித்து, தான் இருக்கும் இடத்தைக் காட்டிக்கொள்ள வழியில்லாத தால், ஏதாவது ஏடாகூடமாகப் பேசி, "ஏ' ரக சமாச்சாரங்களை எடுத்துவிட்டு, அக்கப்போர் பண்ணுவதுதான் தெலுங்கு ஜில்ஜில் ரமாமணியான ஸ்ரீரெட்டியின் வேலை.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை வம்புக்கு இழுத் தார். அதன்பின் சமந்தாவுடன் ட்விட்டரில் சண்டை போட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலை வம்புக்கு இழுத் தார். விஷாலுடன் பெட்ரூமில் இருந் ததைப் பற்றிப் பேசும்போது "மலைப்பாம்பு போல' என்று ஓப்பனாகவே பேசி திகில் கிளப்பினார்.

sri

சமீபத்தில் திடீரென வாண்ட டாக வந்து பத்திரிகை யாளர்களை சந்தித்தார். ""நாங்க ஆந்திராவுல பரம்பரை பணக்காரர்கள்! பல கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கு! இங்க சென்னையிலும் ஏகப்பட்ட சொத்து இருக்கு! என்னிடம் ஆடி கார் இருக்கு! அதைவிட மதிப்புள்ள சொகுசுக் கார் இருக்கு'' என அள்ளி விட்டார். ஸ்ரீரெட்டியிடம் ஆடி கார் வந்த கதையை பல மாதங் களுக்குமுன்பே "சினிக்கூத்து' இதழில் எழுதியிருந்தோம்.

Advertisment

அதேபோல சென்னைக்கு வந்த புதிதில், மடிப்பாக் கத்திலுள்ள லாட்ஜ் ஒன்றில் தினசரி ஏழாயிரம் ரூபாய் வாடகைக்கு இருந்த ஸ்ரீரெட்டி, சென்னையில் சொத்து வாங்கியது எப்படி? அது சரி, "இருந்த' மகராசன் எடுத்துவிட்டிருப்பான், நமக்கென்ன வந்துச்சு!

சரி, இப்ப ஸ்ரீரெட்டி யின் லேட்டஸ்ட் அக்கப்போருக்கு வருவோம். சென்னை வளசரவாக்கம் அன்பு நகர் 10-ஆவது தெருவில் தனி பங்களாவில் வசிக்கிறார் ஸ்ரீரெட்டி. (இந்த வீட்டைக் கொடுத்த ஓனரின் கதி என்னாகப் போகுதோ? எப்படியெல்லாம் சிக்கிச் சீரழியப் போறாரோ?) ஸ்ரீரெட்டியின் வீட்டருகே இருக்கும் ரிடையர்டு போலீஸ் அதிகாரியின் பங்களாவில் நடிகை தமன்னா நடிக்கும் வெப் சீரிசின் ஷூட்டிங் நடந்துவரு கிறது. பொதுவா ஷூட்டிங் னாலே ஏகப்பட்ட வண்டிகள் வரத்தான் செய்யும். இது ஸ்ரீரெட்டிக்கும் தெரியும்.

இருந்தாலும் என்ன செய்ய? "ஏ நல்லா பார்த்துக்க... நானும் இருக்கேன்'னு காட்டிக் கொள்வதற்காக, ""ஏகப்பட்ட ஷூட்டிங் வண்டிகள் என் வீட்டு முன்னால் நிற்பதால், என்னோட ஆடி காரை வீட்டுக்குள் விடமுடியாம வெளியில நிப்பாட்டிருந்தேன். அப்ப புரொடக்ஷன் மேனேஜர் மனோஜ் என் வண்டியின் சைடுல கோடு போட்டார்.

Advertisment

srr

அதுக்கடுத்த நாள் சைடு கண்ணாடியை உடைச்சுட்டார். இதுக்கான ஆதாரம் என் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி. புட்டேஜ்ல இருக்கு'' என கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் கொடுத்து அதகளம் பண்ணினார். புகாரை வாங்கிய போலீசாரோ, ""இந்தப் பொண் ணோட ராவடி தாங்கமுடியல. சி.சி.டி.வி. புட்டேஜ் ஆதாரம் இருக்கு இருக்குன்னு சொல்லுதே தவிர, ஆதாரத்தை கண்ல காட்டாம டிமிக்கி கொடுக்குது. ஆடி காரின் கண்ணாடிய உடைக்கணும்னு மனோஜ் அம்மன் கோவிலில் வேண்டிக்கிட்டாரா என்ன?'' என்கிறார்கள்.

இப்போது ஸ்ரீரெட்டியின் பாச வட்டத்துக்குள் "பனங் காட்டுப் படை' கட்சியின் தலைவர் ஹரி நாடார் இருக்கிறார்.