""படுத்தார்கள்... பயன்படுத்தினார்கள்... ஆனால் சினிமாவில் வாய்ப்புத்தரவில்லை'' என்று ஆந்திர சினிமாப் புள்ளிகளில் ஆரம்பித்து, கோடம்பாக்கம் சினிமாப் புள்ளிகள் பலபேரை கிடுகிடுக்க வைத்தவர் தெலுங்கு நடிகை(??!!)யான ஸ்ரீரெட்டி. ஆந்திர சினிமா டைரக்டர் சேகர் கோட்லா, மாஸ் ஹீரோவான ராணா டகுபதி, ராணாவின் தம்பியான அபிராம் டகுபதி, இளம் ஹீரோ நானி என தன்னிடம் படுத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பொளந்து கட்டினார்.
அங்கே இருப்பவர்களை ஒரு வழி பண்ணிவிட்டு, நேராக சென்னைக்கு வந்திறங்கினார்.
இவரின் முதல் அட்டாக், டைரக்டரும் "காஞ்சனா' புகழ் ஹீரோவுமான ராகவா லாரன்ஸ்தான். ""நடிக்க சான்ஸ் தர்றேன்னு சொல்லி, என்னி டம் படுக்கலைன்னு அந்த மந்த்ராலயா ராகவேந்திரா சா
""படுத்தார்கள்... பயன்படுத்தினார்கள்... ஆனால் சினிமாவில் வாய்ப்புத்தரவில்லை'' என்று ஆந்திர சினிமாப் புள்ளிகளில் ஆரம்பித்து, கோடம்பாக்கம் சினிமாப் புள்ளிகள் பலபேரை கிடுகிடுக்க வைத்தவர் தெலுங்கு நடிகை(??!!)யான ஸ்ரீரெட்டி. ஆந்திர சினிமா டைரக்டர் சேகர் கோட்லா, மாஸ் ஹீரோவான ராணா டகுபதி, ராணாவின் தம்பியான அபிராம் டகுபதி, இளம் ஹீரோ நானி என தன்னிடம் படுத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பொளந்து கட்டினார்.
அங்கே இருப்பவர்களை ஒரு வழி பண்ணிவிட்டு, நேராக சென்னைக்கு வந்திறங்கினார்.
இவரின் முதல் அட்டாக், டைரக்டரும் "காஞ்சனா' புகழ் ஹீரோவுமான ராகவா லாரன்ஸ்தான். ""நடிக்க சான்ஸ் தர்றேன்னு சொல்லி, என்னி டம் படுக்கலைன்னு அந்த மந்த்ராலயா ராகவேந்திரா சாமிமீது ராகவா லாரன்ஸ் சத்தியம் பண்ணிச் சொல் லட்டும்'' என்று ஸ்ரீரெட்டி சொன்னதும் திகிலடித்துப் போனார் ராகவா. ""அப்படி யெல்லாம் எதுவும் நடக்கல...
ஸ்ரீரெட்டிக்கு நடிக்கத் தெரிஞ்சா நானே சான்ஸ் தருவேன்'' என்று சமாளித் தார் ராகவா லாரன்ஸ். அடுத்த அதிரடியை ஆரம்பித்தார் ஸ்ரீரெட்டி. "ஆந்திராவுக்கு வந்திருந்த போது டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் என்னிடம் பல முறை செக்ஸ் வைத்துக் கொண்டார். அவர் வேலை முடிந்ததும் என்னை கண்டு கொள்ளவேயில்லை. நூறு தடவைக்கும்மேல் அவரது செல்ஃபோனுக்கு கான் டாக்ட் பண்ணியும் எடுக்க வில்லை'' என்றார் ஸ்ரீரெட்டி. ""நான் அவரிடம் படுக்கவேயில்லை'' என்று வழக் கம்போல் பல்டி அடித்தார் முருகதாஸ்.
""ஹைதராபாத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது, நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், டைரக்டர் சுந்தர். சி. ஆகியோரும் தமிழ் சினிமாவில் சான்ஸ் தருவதாகச் சொல்லி, படுக்கையில் என்னைப் பயன்படுத்திக் கொண் டார்கள்'' என்று அதிரடி குண்டு வீசினார் ஸ்ரீரெட்டி. ""நாங்கள் யாரும் படுக்கவேயில்லை'' என்று ஒட்டுமொத்த மாக எல்லாரும் மறுத்த தோடு, ஸ்ரீரெட்டிமீது மானநஷ்ட வழக் குப் போடப் போவ தாகவும் சொன்னார் கள். ""முடிஞ்சா (கேஸ்) போட்டுப்பாரு'' என்ற தில்லுடன், சென்னையிலேயே பெர்மனண்டாக வீடு எடுத்து தங்கினார் ஸ்ரீரெட்டி.
""கேஸ் போடுவோம்'' என்று சொன்ன வீராதி வீரர்கள் எல்லாரும் கப்சிப்பாகிவிட்டார்கள். திரைமறைவில் என்ன நடந்தது என்று கோடம்பாக்கம் ஏரியாவில் விசாரித்தோம். "எல்லாரும் பணத்தைக் கொட்டி அழுது ஸ்ரீரெட்டி யிடம் சரண்டராகிவிடார்கள்' என்ற அந்தத் தயாரிப்பாளர், ஸ்ரீரெட்டி யாரிடம் எவ்வளவு கறந்தார் என்பதையும் சொன்னார்.
""விஷால் மேட்டருக்கு ஆதாரம் இல்லாததால தப்பிச்சுட்டாரு. மற்ற எல்லாருமே ஃபோட்டோ ஆதாரத்து டன் சிக்கியதால், பணம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள். ராகவா லாரன்ஸ் 20 லட்சம் கொடுத்து சரண்டரா னார். இமயமலை பாபாஜி ஃபோட்டோ வுக்கு முன்னால் ஏ.ஆர். முருகதாஸும் ஸ்ரீரெட்டியும் சாமி கும்பிடுவதுபோலவும், சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீரெட்டியின் மேலாடையை அவிழ்ப்பது போலவும் என்று ஏகப்பட்ட கசமுசா சீன்களுடன் வகையாக சிக்கிக் கொண்டார் முருகதாஸ். அதனால் 60 லட்ச ரூபாயை ஸ்ரீரெட்டியிடம் கொட்டி அழுதார் முருகதாஸ். இதே ஆந்திர ஹீரோக்களான ராணா டகுபதி ஒன்றரை கோடி, அவரின் தம்பி அபிராம் டகுபதி 75 லட்சம், நானி 40 லட்சம், டைரக்டர் சேகர் 25 லட்சம், நம்ம ஊரு ஸ்ரீகாந்த் 10 லட்சம் என வரிசையாக ஸ்ரீரெட்டி யிடம் சரணாகதி அடைந் தார்கள். "அவளை நான் பார்த்துக்குறேன்' என்று குஷ்பு சொல்லிவிட்டதால், சுந்தர்சி. மட்டும் இப்போதைக்கு தப்பித்திருக்கிறார்.
ஆனா ஒண்ணுங்க, இவ்வளவு வசூல் பண்ணியும் சோத்துக்கு வழியில்லாத மாதிரியே இப்பவும் டிராமா போட்டுக் கிட்டிருக்காரு பாருங்க...
அடேங்கப்பா! ஸ்ரீரெட்டி எமகாத கிதான் போங்க'' என்று வெளுத்துக் கட்டினார் அந்தத் தயாரிப் பாளர்.
மாட்டிக்கிட்டவன் கொட்டி அழுகிறான், மகராசி மஞ்சக் குளிக்கிறா. அம்புட்டுத் தான் நாம சொல்ல முடியும்!