படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என்று நடிகைகள் திடீரென்று பகீர் கிளப்புகிறார்கள்.
அந்தவரிசையில் தன்னிடம் மிக மோசமாக நடந்துகொண்டார்கள், படுக்கைக்கு அழைத்தார்கள் என்று அதிரடியாக பேட்டி அளித்திருக்கிறார் நடிகை சுர்வீன் சாவ்லா. அதுவும்
ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து முறையாம்.
""படப்பிடிப்புத் தளத்தில் தன்னிடம் நெருங்கிவந்த இயக்குநர் ஒருவர், என் நெஞ்சுக்குழி எப்படி இருக்குன்னு பார்க்க ஆசைப்படுவதாக சொன்னார்.
அதேபோல இன்னொரு இயக்குநர் என் தொடைகளை நெருக்கமாக பார்க்கணும்னு ஆசைப்படுவதாக சொன்னார்.
மற்றொரு இயக்குநர் நீங்க அதிக எடையோட இருப்பதாக தோணுது என்றார். ஆனால், என்னோட எடை அப்போ வெறும் 56 கிலோதான் இருந்துச்சு. அப்புறம்தான் தப்பான எண்ணத்தோட அவர் சொன்னதைப் புரிஞ்சிக்கிட்டேன். வேறொரு இயக்குநர் என்னுடைய உடலை அங்குல அங்குலமாக பார்க்கணும்னு சொன்னார்'' என குற்றச் சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். ஆனால், யாருடைய பெயரையும் வெளியிடவில்லை.