சங்கத் தலைவர்களின் சீட்டிங் ஆட்டம்!

/idhalgal/cinikkuttu/soccer-leaders-shouting

தானம் கொடுத்தது கலைஞர் தாளம் போடுவது அ.தி.மு.க.வுக்கா?

2006-2011 முதல்வர் கலைஞரின் தலைமையிலான ஆட்சிக்காலம், சினிமாக்காரர்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்சி இப்படி ஏதாவது ஒரு சங்கம், கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தியபடியே இருக்கும், கோரிக்கைகளை வைத்தபடியே இருக்கும். முதல்வர் கலைஞரும் அவர்கள் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி, கேட்டதை யெல்லாம் செய்து கொடுத்தார்.

selvamaniஅப்படிப்பட்ட பாராட்டு விழா வரிசையில் 2010-ஆம் ஆண்டு, ஃபெப்சி சார்பில் கலைஞருக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது ஃபெப்சியின் தலைவராக இருந்தவர் வி.சி.

தானம் கொடுத்தது கலைஞர் தாளம் போடுவது அ.தி.மு.க.வுக்கா?

2006-2011 முதல்வர் கலைஞரின் தலைமையிலான ஆட்சிக்காலம், சினிமாக்காரர்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கமான ஃபெப்சி இப்படி ஏதாவது ஒரு சங்கம், கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தியபடியே இருக்கும், கோரிக்கைகளை வைத்தபடியே இருக்கும். முதல்வர் கலைஞரும் அவர்கள் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி, கேட்டதை யெல்லாம் செய்து கொடுத்தார்.

selvamaniஅப்படிப்பட்ட பாராட்டு விழா வரிசையில் 2010-ஆம் ஆண்டு, ஃபெப்சி சார்பில் கலைஞருக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது ஃபெப்சியின் தலைவராக இருந்தவர் வி.சி.குகநாதன். கலைநிகழ்ச்சி, கலைஞருக்கு புகழுரை எல்லாம் முடிந்த பின், சென்னையின் புறநகரான பையனூரில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டவும், ஃபெப்சி சார்பில் பிரம்மாண்ட ஸ்டுடியோ கட்டிக் கொள்ளவும் 65 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார் கலைஞர். இதேபோல் சின்னத்திரைக் கலைஞர்களுக்கு 35 ஏக்கர் என மொத்தம் 100 ஏக்கரை வழங்கினார்.

வி.சி.குகநாதனுக்குப் பின் டைரக்டர் அமீர் உட்பட மூன்று பேர் ஃபெப்சியின் தலைவர்களாக பொறுப்பு வகித்தனர். இப்போது ஃபெப்சியின் தலைவராக இருப்பவர் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. கடந்த 6 வருடங்களாக பையனூர் நிலத்தின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலையில், திடீரென கடந்த வாரம் வாய் திறந்தார் ஆர்.கே.செல்வமணி. ""கலைஞர் வழங்கிய 65 ஏக்கர் நிலத்தில் 12 ஏக்கரில் இந்தியாவிலேயே மிக பிரம்மாண்டமான ஸ்டுடியோ கட்டி முடிவடையும் நிலையில்ameer உள்ளது. ஜூலை மாதம் பணிகள் முடிந்து 15-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வைக்க நேரம் கேட்டுள்ளோம். 6 ஏக்கரில் தொழிலாளர் களுக்கு 640 வீடுகள் கட்டும் பணி விரை வில் தொடங் கும். இது எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு என்பதால், ஃபெப்சி ஸ்டுடியோவுக்கு எம்.ஜி.ஆர்.பெயரை வைக்க, முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்'' என்றார் செல்வமணி.

"ஆர்.கே.செல்வமணியின் சீட்டிங் ஆட்டம் இங்கு தான் ஆரம்பமாகிறது!' என சொல்லும் ஃபெப்சியின் நிர்வாகி ஒருவர் அது பற்றி விளக்கமாக சொல்லத் தொடங்கினார். ""இந்தியாவிலேயே பெரிய ஸ்டுடியோங்கிறது பெருமைக்குரிய விஷயம்தான், இல்லேன்னு சொல்லல. ஆனா ஏழு வருஷமா தொழிலாளர் களுக்கு வீடு கட்றதப் பத்தி எந்தத் தலைவரும் யோசிக்கவே இல்லை. இப்பத்தான் 6 ஏக்கர்ல 640 வீடு கட்டும் வேலையை ஆரம்பிக்கவே போறார்களாம். காலப்போக்கில் மீதி இருக்கும் 37 ஏக்கர் நிலத்தின் கதி என்னவாகுமோ, எப்படியெல்லாம் கைமாறப் போகுதோ, எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சரி, தில்லு இருக்குறவன் திங்கப் போறான்னு நினைச்சுட்டு போக வேண்டியதுதான். ஆனா ஸ்டுடியோவுக்கு எம்.ஜி.ஆர்.பேரை வைக்க வலியுறுத்துவோம்னு சொன்னதைத் தாங்க ஜீரணிக்க முடியலை.

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டுதான், அவரை பெருமைப் படுத்தணும் தான் தப்பில்லை. ஏற்கெனவே திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர்.பெயர் தானே இருக்கு. அத்தனை ஏக்கர் நிலத்தை இலவசமா கொடுத்த கலைஞர் பெயரை வைக்கச் சொல்ல வக்கில்ல, திராணியில்ல.

kalaingar

தானம் கொடுத்தது கலைஞர், தாளம் போடுறது அ.தி.மு.க.ன்னா இதைவிட பெரிய அயோக்கியத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதே செல்வமணி ஃபெப்சியின் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக, எந்தெந்த வழி களில் சீட்டிங் வேலைகளைப் பண்ணினார் என்பது எல்லோருக்கும் தெரியும்'' என பொங்கித் தீர்த்துவிட்டார் அந்த நிர்வாகி.

அண்ணே ஆர்.கே.செல்வமணி அண்ணே இதையெல்லாம் யோசிச்சுப் பாருங்கண்ணே.

-ஈ.பா.பரமேஷ்வரன்

இதையும் படியுங்கள்
Subscribe