கீர்த்தி சனான் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர். சமீபத்தில் தன் கவர்ச்சிப் படலத்தைத் தொடங்கி, ரசிகர்களை லயிப்பில் ஆழ்த்தி வருகிறார். தற்போது ஜாம்பியாவிற்கு சம்மர் வெக்கேஷன் சென்றிருக்கும் கீர்த்தி, அங்கு எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளிக் குவிக்கிறார். அப்படி, ஜாம்பியாவின் தேசியப் பூங்கா ஒன்றில் எடுத்த புகைப்படம் ஒன்று, அவர் நினைத்ததற்கு மாறாக நெகட்டிவ் ரெஸ்பான்ஸைக் கொடுத்திருக்கிறது.
ஆம், பூங்காவில் இருந்த சிறுத்தை ஒன்றோடு கீர்த்தி சனான் நடப்பது போன்று இருக்கும் அந்தப் படத்திற்குக் கீழே, விலங்குகளை அவற்றின் போக்கில் "விடாமல், கட்டி வைத்து அடிமைப்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. ச்சே, கீர்த்தி இப்டி பண்ணிட்டாங்களே' என்று கமெண்டுகளை அள்ளி வீசியிருக்கின்றனர். இதற்கு பதிலளித்த கீர்த்தி, ""ஜாம்பியா பூங்காவில் விலங்குகள் சுதந்திரமாகவே இருக்கின்றன. ஒரு வாக் போவதற்காக மட்டுமே கட்டிவைத்து கூட்டி வந்தார்கள்'' என்று எக்ஸ்ட்ரா கன்டென்டை
கீர்த்தி சனான் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர். சமீபத்தில் தன் கவர்ச்சிப் படலத்தைத் தொடங்கி, ரசிகர்களை லயிப்பில் ஆழ்த்தி வருகிறார். தற்போது ஜாம்பியாவிற்கு சம்மர் வெக்கேஷன் சென்றிருக்கும் கீர்த்தி, அங்கு எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளிக் குவிக்கிறார். அப்படி, ஜாம்பியாவின் தேசியப் பூங்கா ஒன்றில் எடுத்த புகைப்படம் ஒன்று, அவர் நினைத்ததற்கு மாறாக நெகட்டிவ் ரெஸ்பான்ஸைக் கொடுத்திருக்கிறது.
ஆம், பூங்காவில் இருந்த சிறுத்தை ஒன்றோடு கீர்த்தி சனான் நடப்பது போன்று இருக்கும் அந்தப் படத்திற்குக் கீழே, விலங்குகளை அவற்றின் போக்கில் "விடாமல், கட்டி வைத்து அடிமைப்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. ச்சே, கீர்த்தி இப்டி பண்ணிட்டாங்களே' என்று கமெண்டுகளை அள்ளி வீசியிருக்கின்றனர். இதற்கு பதிலளித்த கீர்த்தி, ""ஜாம்பியா பூங்காவில் விலங்குகள் சுதந்திரமாகவே இருக்கின்றன. ஒரு வாக் போவதற்காக மட்டுமே கட்டிவைத்து கூட்டி வந்தார்கள்'' என்று எக்ஸ்ட்ரா கன்டென்டைக் கொடுக்க, ரசிகர்களின் சீற்றம் அதிகமாகி, கீர்த்தியை டயர்ட் ஆக்கிவிட்டார்கள்.
நடிகை த்ரிஷா நடிப்பதாக சொல்லப்பட்ட "கர்ஜனை' திரைப்படத்தின் ரிலீஸ் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக இழுவையாக முடிந்து, ஒருவழியாக ஆகஸ்ட் என்று முடிவாகி இருக்கிறது. 2016-ல் ஒப்பந்தமாகி, 2017-ல் படப்பிடிப்பு தொடங்கி, பின் சில காரணங்களால் வெளிவராமலே இருந்த இந்தப்படம், தற்போது தியேட்டர் உரிமையைப் பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் சுந்தர் பாலு, ""இவ்ளோ பெரிய தாமதம் ரொம்பவே வருத்தமளித்தாலும், ஒருவழியாக ரிலீஸ் ஆவது மகிழ்ச்சியைத் தருகிறது. வெறும் 27 நாளிலேயே படத்தை முழுமையாக முடித்து 2017-லேயே ரெக்கார்ட் வைத்தோம். சி.ஜி. வேலைகள் 2018-ல் முடிந்தன. ஹீரோயினை மையமாகக் கொண்ட கதையம்சம் என்பதால், ஆர்வமாகப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட த்ரிஷா, சண்டைக் காட்சிகளுக்காகப் பிரத்யேகப் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பட்ட கஷ்டங்கள், படத்தில் ஸ்டண்ட் காட்சிகளாக வரும்போது ரசிகர்களுக்குத் தெரியும். எல்லாரையும்போலவே ஆகஸ்ட் ரிலீசுக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறோம்'' என்கிறார். இதே இயக்குநர் வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா தத்தா, ஆஸ்னா சவேரி, சுபிக்ஷா ஆகியோரை வைத்து "கன்னித்தீவு' என்ற படத்தை இயக்கிவருகிறார்.
"புரூஸ் லீ' படப்புகழ் கீர்த்தி கார்பந்தா அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
மூன்றுமே வெவ்வேறு கதைக்களங்களைக்கொண்ட, தன் நடிப்புக்குத் தீனிபோடும் படங்கள் என்பதால், மெய்யாலுமே குஷியாக இருக்கிறார். ""எல்லா நடிகர், நடிகைகளையும்போலவே தொடர்ச்சியாக க்ளீஷே கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு மட்டும் விருப்பம் இருக்குமா என்ன?'' என்று கேட்கும் கீர்த்தி "பகள்பன்டி' என்ற படத்தில், ஃப்ரான்ஸ் மொழியில் வெளியான "ப்ரன்ட்ஸ்' படத்தில்வரும் ஃபோப் கதாபாத்திரத்திற்கு இணையான கேரக்டரில் நடித்திருக்கிறாராம். இந்தக் கேரக்டரின் பலமே அதன் தைரியம்தானாம்.
அடுத்ததாக, "ஹவுஸ் ஃபுல்-4'. இந்தப் படத்தில் மூன்று சகோதரிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.
அது குறும்புக்கார கேரக்டராக இருந்தாலும், படத்தில் அவருக்கு முக்கியமான சண்டைக் காட்சிகள் அவருக்கு இருக்கிறதாம். மேலும், சக நடிகை களுக்கு இணையாக ஸ்கோர் செய்வதற்காகவே கூடுதல் ஹோம் ஒர்க் செய்திருக்கிறாராம். தான் நடித்ததிலேயே மிகவும் சவாலான கேரக்டர் அதுதான் என்கிறார். மூன்றாவ தாக, "செரே' படத்தின் நாயகியாக, ஒரு தனித்துவமான குணம் படைத்த பெண்ணாக நடித்திருக்கிறாராம். இந்தக் கேரக்டருக்கு வசனங்களைவிடவும் முகபாவனைகள்தான் முக்கியம் என்பதால், அதிகம் பேசப்படக்கூடிய வகையில் நடித்திருப்பதாக அவரே சொல் கிறார். எல்லாவற்றிற்கும்மேலாக, தனது கனவுப்படம் குறித்து மனம் திறக்கும் கீர்த்தி, சைக்கோ த்ரில்லரான "ஏக் ஹசீனா தீ'-யைப் போன்ற படத்தில் நடிக்கும் ஆசை இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
புகழ்பெற்ற நடிகரும், இயக்குநருமான நானா படேகர்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பாக்கினார் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2008-ஆம் ஆண்டு நடந்த ஒரு பாடல் படப்பிடிப்பின்போது, நானா படேகர் உள்ளிட்ட நால்வர், தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக "மீ டூ' குற்றச்சாட்டை முன்வைத்த கையோடு, இதுபற்றி புகாரும் கொடுத்தார் தனுஸ்ரீ. இதுதொடர்பான விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நிலையில், ஓஷிவாரா காவல்துறையினர் மும்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில், தனுஸ்ரீ யின் புகாரில் உண்மைத்தன்மை தெரியவில்லை என்றுகூறி அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
அமெரிக்காவில் இருக் கும் தனுஸ்ரீ, தன் வழக் கறிஞர்மூலமாக இந்த வழக்கை நடத்திவருகிறார்.
""காவல்துறையினர் விசாரணைக்காக எடுத்துக் கொண்ட சாட்சியங்களில் பலர் யாரென்றே தெரியவில்லை. அவர் களின் பெயர்கூட எனக் குத் தெரியாது. சம்பவத் தன்று என் கார் தாக்கப் பட்டது. அங்கு இருந்தவர் களை அழைத்து விசாரித் தாலே உண்மை வெளிப் படும். காவல்துறை சமர்ப் பித்திருக்கும் அறிக்கையில் நாங்கள் முரண்படுகிறோம்.
அது ஒருதலைப்பட்சமானதாக இருக்கிறது. நீதிமன்றத்திலும் இதுபற்றி நாங்கள் அழுத்த மாக விவாதிப்போம். எங்கள் தரப்பு ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. அவர்கள் தரப்பு ஆட்டத்தைக் காட்டிவிட்டார்கள். இனி நாங்கள் எங்கள் பலத்தை நாங்கள் காட்டுவோம்'' என்று அதிரடி கிளப்புகிறார் தனுஸ்ரீ.
-மதி