actor arulப்போது வருகிற படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ- நடிக்க வருபவர்கள் பலரிடமும் நல்லதொரு கதை இருக்கிறது. கூட்டத்தில் வரும் ஒருவராக முகம் காட்டியதிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லும் வில்லன் நடிகர் என்கிற நிலையை எட்டியிருப்பவர் நடிகர் அருள் .அருள் தன் முன்கதைச் சுருக்கத்தைக் கூறுகிறார்:

""எனக்குச் சினிமாமீது எதனால் ஆர்வம் வந்தது என்று சரியாகச் சொல்ல முடியாது. நான் பி.எஸ்ஸி தொடங்கி எம்.பி.ஏ வரை பல படிப்புகள் முடித்தேன். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன்.

எனக்குச் சினிமா ஆர்வம் வந்ததும் ஒரு கட்டத்தில் அதாவது- 2009-ல் வேலையை விட்டுவிட்டேன். 2010-ல் பாலு மகேந்திரா சாரைப் போய்ப் பார்த்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர், "உனக்கு நாற்பது வயதாகிறது. நீ நடிக்க முயற்சி செய்வதே உனக்குப் பாதுகாப்பு' என்றார். போராடித்தான் இலக்கை அடைய முடியும் என்று நம்பினேன். 3 ஆண்டுகளில் சுமார் 4,500 இடங்களில் வாய்ப்பு கேட்டிருப்பேன். முகம் தெரியும்படி வந்த முதல் படம், "முரண்'. பிறகு "எங்கேயும் எப்போதும்', 18 படங்களில் மூன்று நான்கு காட்சிகளில் நடித்தேன். ஜீவா சங்கரின் "அமர காவியம்' படத்தை மறக்க முடியாது. அதில் 16 காட்சிகளில் வந்தேன்.

ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக முன்னேறவே ஆசை. "" என்கிறார் உறுதியான நம்பிக்கையுடன்.

Advertisment