ரகளை சிம்பு! ரணகள டி.ஆர்.!

/idhalgal/cinikkuttu/simba-river-ranakala-tr

"முளைச்சு மூணு இலை விடல; அதுக்குள்ள எம்புட்டு குசும்பு பாரு' என பெரியவர்கள் சொல்வார்கள். அதுபோலத்தான் "நடிச்சு நாலு படம்கூட ஓடல; சிம்பு பண்ணும் சேட்டையை தாங்க முடியல' என தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

""சிம்பு இஸ் எ வெரி நைஸ்மேன், ஜென்டில்மேன்'' என பாராட்டுப் பத்திரமெல்லாம் வாசித்து, "மாநாடு' படத்தை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னார் தயாரிப்பாளரும் டைரக்டருமான சுரேஷ் காமாட்சி. படத்தின் டைரக்டராக வெங்கட் பிரபுவை ஒப்பந்தம் செய்த சுரேஷ் காமாட்சி, சில லட்சங்களை அட்வான்சாகவும் கொடுத்தார்.

simbu

ஹீரோ சிம்புவுக்கு சில கோடிகளை சம்பளமாகப் பேசி, இரண்டு கோடி

"முளைச்சு மூணு இலை விடல; அதுக்குள்ள எம்புட்டு குசும்பு பாரு' என பெரியவர்கள் சொல்வார்கள். அதுபோலத்தான் "நடிச்சு நாலு படம்கூட ஓடல; சிம்பு பண்ணும் சேட்டையை தாங்க முடியல' என தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

""சிம்பு இஸ் எ வெரி நைஸ்மேன், ஜென்டில்மேன்'' என பாராட்டுப் பத்திரமெல்லாம் வாசித்து, "மாநாடு' படத்தை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னார் தயாரிப்பாளரும் டைரக்டருமான சுரேஷ் காமாட்சி. படத்தின் டைரக்டராக வெங்கட் பிரபுவை ஒப்பந்தம் செய்த சுரேஷ் காமாட்சி, சில லட்சங்களை அட்வான்சாகவும் கொடுத்தார்.

simbu

ஹீரோ சிம்புவுக்கு சில கோடிகளை சம்பளமாகப் பேசி, இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். இதோ அதோ என இழுத்தடித்த சிம்பு, கடைசியில் சுரேஷ் காமாட்சிக்கு பெப்பே காட்டினார். சிம்புவிடம் சிக்கிச் சீரழிந்த சுரேஷ் காமாட்சி, "மாநாடு' படம் எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக கண்ணீருடன் அறிவித்தார். சுரேஷ் காமாட்சியின் இந்த சோக எபிசோடை "சிம்புவிடம் சிக்கியவரின் கதை!' என்ற தலைப்பில் 2019 ஆக.20 "சினிக்கூத்து' இதழ் அட்டைப் படக் கட்டுரையில் எழுதியிருந்தோம்.

அந்தக் கட்டுரையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உட்பட பல தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் எடுத்தும், படம் எடுப்பதற்காக அட்வான்ஸ் கொடுத்தும் படும்பாட்டையும் எழுதியிருந்தோம்.

tr

சுரேஷ் காமாட்சி, சிம்புவுக்கு இரண்டு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து ஐந்து மாதங்களுக்கு மேலாக நொந்து நொம்பலமாகிக் கிடப்பது தெரியாமல் வாண்டடாகப் போய் சிம்பு வண்டியில் ஏறினார் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. சிம்பு, கௌதம் கார்த்திக் காம்பினேஷனில் மெகா படம் தயாரிக்கப் போவதாக அறிவித்து, இரு ஹீரோக்களுக்கும் பெரும் தொகையை அட்வான்சாக கொடுத்தார்.

ஞானவேல் ராஜாவின் இந்த அறிவிப்பைப் பார்த்து பல தயாரிப்பாளர்கள் ஆடிப்போய்விட்டனர். "ஞானவேல் ராஜாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? சிம்பு- கௌதம் கார்த்திக், அடேங்கப்பா...! சூப்பர் காம்பினேஷன்' என நக்கலடித்தார்கள்.

"மாநாடு' படத்தைக் கைவிடுவ தாக சுரேஷ் காமாட்சி அறிவித்ததும், வீராப்பாக வெகுண்டெழுந்த சிம்பு, ""மகா மாநாடு' படத்தை எங்களது பேனரான சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப் போகிறேன்'' என திகில் கிளப்பினார். சிம்புவின் அப்பாவான டி.ஆரும் சுரேஷ் காமாட்சியை அடுக்கு மொழியால் திட்டித் தீர்த்தார்.

"சிம்புவுக்கு தமிழ் சினிமா மார்க்கெட்டே ததிகினத்தோம் போட்டுக்கிட்டிருக்கு. இந்த லட்சணத்துல ஐந்து மொழியில "மகா மாநாடு' படமாம். டி.ஆர். சேர்த்து வச்சிருக்கிற சொத்துக்குப் பிடிச்ச அணத்தம், பல டைரக்டர்கள் கமெண்ட் அடித்தனர்.

"அட நீங்க ஒண்ணு! டி. ஆராவது... சொத்த விக்கிறதாவது... ரெண்டு மூணுபேரை அமுக்கி, தயாரிப்பு பார்ட்னரா போட முயற்சிப்பாரு. இல்லேன்னா பத்து நாள் ஷூட்டிங்குடன் படத்திற்கு மங்களம் பாடிருவாரு' என்கிறார்கள் சில அசோசி யேட் டைரக்டர்கள்.

இப்படியெல்லாம் நிலை போய்க்கொண்டிருக்கும்போது, கடந்த 27, 28-ஆம் தேதிகளில், சுரேஷ் காமாட்சி, மைக்கேல் ராயப்பன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உட்பட பல தயாரிப்பாளர்கள் டி.ஆர். வீட்டுக்குப் படைதிரண்டுபோய், "சிம்புக்கு கொடுத்த அட்வான்சை திருப்பிக் கொடுங்க' என பிரஷ்ஷர் கொடுத்துள்ளனர்.

சிம்புவின் ரகளையால் ரணகள மாகியிருக்கிறார் டி.ஆர்.

-பரமு

cini100919
இதையும் படியுங்கள்
Subscribe