ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளதாம். அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்களும் இருக்குதாம்.
நீண்டகாலம் தமிழ் சினிமாவில் தாக்குப் பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே... அந்தவகையில் தன் திறமை யான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடமுண்டு.
"சித்து +2'-வில் திரைக்கதை மன்னன் பாக்கியராஜால் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, சமீபத்தில் வெளியான "ராஜா ரங்குஸ்கி' வரை இவரின் கலைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது டைரக்டர் பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்தக் கதை சாந்தினிக்கு மிகவும் பிடித்ததால், உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.