பெரிய திரையான சினிமா உலகில் நடிகர்கள்- நடிகைகளின் காதல்- மோதல்- முட்டல்- திட்டல்- திகட்டல்- அட்ஜெஸ்மென்ட்- தாலி கட்டாமலே சேர்ந்து வாழ்தல்- பிரிதல் என ஏகப்பட்ட சுவாரஸ்ய சங்கதிகளும், கசமுசா சங்கதிகளும் சர்வ சாதாரணமாக நடக்கும்.

ஆனால், சின்னத்திரையான டி.வி. சீரியல் நடிகர்- நடிகைகளைப் பற்றிய கசமுசா சங்கதிகள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை, தெரியாதபடிக்கு அவர்களும் மூடிமறைத்து மெயின்டெய்ன் பண்ணுவார்கள். காரணம் முக்கால்வாசிப் பெண்கள், டி.வி. சீரியல்களே கதியென கிடப்பதுதான். சாந்தம், கோபம், குரூரம், குறுக்குப் புத்தி, கிறுக்குப் புத்தி என டிசைன் டிசைனான கேரக்டர்களில் சீரியல் நடிகைகள் கலக்கி எடுப்பார்கள். ஒரு நாளைக்கு நான்கு சீரியல்களை ஆண்கள் பார்த்தாலே மனது பேதலித்துவிடும்.

nithya

ஆனால், பெண்களோ எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்து, ""என்னதான் இருந்தாலும் மாமியாக்காரி இப்படி பண்ணிருக்கக்கூடாது. ம்க்கும்... மருமகக்காரி மட்டும் லேசுப்பட்டவளா? சாந்தியோட புருஷன் எப்பப் பார்த்தாலும் லூசுமாதிரியே இருக்கானே ஏன்?''... இப்படியெல்லாம் சீரியல் கேரக்டர்களை அலசி ஆராய்ந்து பி.எச்.டி. பட்டம் வாங்கும் அளவுக்கு எக்ஸ்பெர்ட்டாக இருப்பார்கள்; இருக்கிறார்கள்.

Advertisment

அப்படிப்பட்ட சின்னத் திரை சங்கதிகளை "சினிக்கூத்து' வாசகர்களுக்கு அவ்வப்போது வழங்க இருக்கிறோம். இதில் ஏடாகூட சங்கதிகள் மட்டுமல்ல; எல்லா சங்கதிகளும் வரும்.

(சினிமா உலகைப்போலவே பிற மாநில நடிகைகளின் ஆதிக்கம்தான் தமிழ் சீரியல்களிலும் இருக்கிறது). இந்த இதழில் பிரபல டி.வி.சீரியல் நடிகைகள் இருவரைப் பற்றி பார்ப்போம்.

முதலில் நித்யா ராம். இப்படிச் சொன்னா, இவர் யாருன்னு தெரியாது. சன் டி.வி.யில் மெகா ஹிட்டான "நந்தினி' நித்யா ராம் என்றால் எல்லாருக்கும் தெரியும். கர்நாடக மாநிலம் ஹூப்ளிதான் நந்தினிக்கு சொந்த ஊர். பள்ளிப் படிப்பை அங்கு முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பை பெங்களூருவில் முடித்தார். பயோடெக்னாலஜி முடித்தபின் மாடலிங் உலகில் காலடி எடுத்துவைத்தார் நித்யா. மகளின் விருப்பத்திற்காக பெங்களூருவில் குடியேறினார் கள் நித்யாவின் பெற்றோர்கள்.

Advertisment

நித்யா ராமிற்கு ரச்சிதா ராம் என்ற தங்கை ஒருவர் இருக்கிறார். கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013-ல் ரிலீசான "புல்புல்' படம்மூலம் ஹீரோயினாகி, இன்று கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார்

ரச்சிதா. ரவிச்சந்திரன், புனித் ராஜ்குமார், தர்ஷன், சிவராஜ்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிபோட்டிருக்கும் ரச்சிதா 25 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். கைவசம் ஆறு படங்கள் வைத்திருக்கிறார்.

சரி, இப்ப நாம் நித்யா ராம் மேட்டருக்கு வருவோம். மாடலிங் உலகில் இருந்து கன்னட டி.வி. சீரியலில் என்ட்ரியானார். 2010-ல் "மல்லி' என்ற கன்னட சீரியல் நித்யா ராமை பிரபலமாக்கியது. 2013-ல் சன் டி.வி.யில் ஒளிபரப்பான "அவள்' சீரியல்தான் நித்யா ராமின் முதல் தமிழ் சீரியல். அதன்பின் பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தாலும் 2017-ல் சன் டி.வி.யில் ஒளிபரப்பான "நந்தினி' திகில் சீரியல்தான் நித்யாவை பிரபல ஹீரோயினாக்கியது.

nithya

சுந்தர்.சி.- குஷ்பு தயாரித்த இந்த சீரியல் தமிழிலில் மட்டுமல்லாது; தெலுங்கு, கன்னடத்திலும் மெகா ஹிட்டடித்தது. இப்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "லக்ஷ்மி ஸ்டோர்ஸ்' சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்துவருகிறார் நித்யா ராம். இப்போது 30 வயதாகும் நித்யாவிற்கு, 25-ஆவது வயதில், அதாவது 2014-ல் பெங்களூருவைச் சேர்ந்த வினோத் கௌடாவுடன் திருமணமானது.

இனிமையாகப் போய்க்கொண்டிருந்த நித்யா- வினோத் இல்லற வாழ்க்கையில் சந்தேகப் பேய் உள்ளே வந்தது. நித்யாமீது சந்தேகப்பட ஆரம்பித்தார் வினோத் கௌடா. பொறுமை இழந்த நித்யா, இரண்டே வருடங்களில் வினோத்தை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பின் தமிழ், கன்னட சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தங்களது "மகளின் வாழ்க்கை இப்படி ஆகிருச்சே...!' என நித்யாவின் பெற்றோர் கள் கவலைப்பட்டனர். மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில் நித்யாவும் இல்லை. ஆனால், பெற்றோர்களின் கவலை, நித்யாவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மாற்றம் ஏற்பட்ட நேரத்தில்தான், பெங்களூருவைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தொழிலதிபர் ஒருவர் நித்யாவின் மனசுக்குள் புகுந்தார். தொழிலதிபர் மனசுக் குள் நித்யாவும் புகுந்தார்.

இருவீட்டாரும் மனம்விட்டுப் பேசியதால் சுபவேளையும் கூடி வந்தது. வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி, நித்யாவுக்கும் அந்த ஆஸ்திரேலியத் தொழிலதிபருக்கும் பெங்களூருவில் திருமணம் நடக்கவுள்ளது. அக்காவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை, தங்கச்சி ரச்சிதா முன்னின்று கவனித்துவருகிறார்.

வாழ்க மணமக்கள்!