விஞர் ஜெயங் கொண்டான் என்கிற மகேஷ். சென்னை கே.கே.நகரில் "கவிஞர் கிச்சன்' என்ற ஓட்டலை நடத்தி வந்தார். ஓட்டலை நடத்திக்கொண்டே சினிமா வில் பாட்டெழுதும் வாய்ப்புக்காக பல சினிமாக் கம்பெனிகளின் படி ஏறி இறங்கினார்.

அத்துடன் கேட்டரிங் தொழிலிலும் கவனம் செலுத்தினார். கோடம்பாக்கத்தின் உதவி இயக்குநர்கள் பலருக்கு "கவிஞர் கிச்சன்' தான் புகலிலிடம். சினிமா நிருபர்களுக்கும்தான்.

p

Advertisment

அதே கே.கே.நகரில் ரா. பார்த்திபன் குடியிருந்தபோது, அவருடன் நன்கு அறிமுகமானார் ஜெயங் கொண்டான். இவரது ஓட்டல் இருக்கும் கட்டடத்தை இடித்து விட்டு, புதுப்பிக்கும் வேலைகள் நடக்க வேண்டியிருந்ததால், சாலிலிகிராமத்தில் இருக்கும் நண்பர் ஒருவரின் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் மாஸ்டராகவும், பார்ட் டைமாக சினிமாவில் சின்னச்சின்ன கேரக்டர் களிலும் நடித்து வந்தார். சிறிது காலம் காமெடி கஞ்சா கருப்புக்கு உதவியாக இருந்தார்.

அவ்வப்போது பார்த்தி பனையும் சந்தித்து வந்தார்.

இந்த நிலையில்தான், பார்த்திபன் "ஒத்த செருப்பு' படத்தை ஆரம்பித்ததும், தயாரிப்புப் பணிகளில் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்

Advertisment

ஜெயங்கொண்டான். "ஒத்த செருப்பு' படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்தபின்... பார்த்திபன் பண்ணிய காரியம்தான், "அவரா இப்படி...' எனக்கேட்க வைத்துள்ளது.

dசென்னையிலிலிருந்து 60 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் கல்பாக்கத்தை எல்லாருக்கும் தெரியும். அந்த கல்பாக்கம் அருகே இருக்கும் கடப் பாக்கத்தில் பார்த்திபனுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் பண்ணை வீடு உள்ளது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பண்ணை வீட்டைப் பராமரித்து, வாழை, தேங்காய், கொய்யா, பலா, நாட்டுக் கோழி வளர்ப்பு என பார்த்திபனுக்கு வருமானம் ஈட்டித் தந்தார்கள். இந்தப் பண்ணை வீட்டில் வேலை பார்த்த ஒரு குடும்பம், பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் ஒன்றரை வருடங்கள் வேலை பார்த்தது. 2018 மார்ச் மாதம் தனது வீட்டில் கொஞ்சம் நகைகளும் பணமும் திருட்டு போய்விட்டதாக போலீசில் கம்ப்ளெய்ன்ட் பண்ணினார்.

போலீசார் விசாரித்ததில் வேலைக்காரகள்மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்தது. ஆனா லும் வேலையிலிருந்து அந்தக் குடும்பத்தை நிறுத்திவிட்டார் பார்த்திபன்.

அந்தக் கதை அப்போ... ஆனா இப்போ, கவிஞர் ஜெயங்கொண்டானுக் கும் அந்தக் குடும்பத்திற் கும் தொடர்பு இருப்பதாகக்கூறி, பார்த்திபனும் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து, சென்னை ஃபோர்பிரேம் பிரிவியூ தியேட்டரில் கடந்த 8-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அடித்து உதைத்து, 3-ஆவது மாடியிலிலிருந்து கீழே தள்ளப் பார்த்திருக்கிறார் கள். அத்துடன் நில்லாமல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயங் கொண்டான் மீது வாய்மொழி யாக புகார் தெரிவித்திருக் கிறார் பார்த்திபன். பதிலுக்கு ஜெயங்கொண்டானும் பார்த்திபன் மீது 9-ஆம் தேதி புகார் அளித்திருக்கிறார்.

d

நடந்தது என்ன என ஜெயங்கொண்டானிடம் கேட்டோம். """அந்தப் பண்ணை வீட்டுக்குப்போய் விளைச்சல் நிலவரங்களை கேட்டுட்டு, நாட்டுக் கோழி முட்டை வாங்கிட்டு வா'ன்னு பார்த்திபன் சார் சொன்னார்.

dஇதுக்கு முன்னால நான் அங்க போனதில்லைங்கிறதாலயும், சார் ஆபீஸ்ல வேலை பார்த்த குடும்பம் என்ற வகையிலும் கடப் பாக்கத்திற்குப் போய் அவர்களிடம் பண்ணை வீட்டிற்குப் போகும் வழி கேட்டேன். இதை அங்கிருந்த வாட்ச் மேன் போட்டுக் கொடுத்துட் டாரு. ஏதோ எனக்கும் அந்தக் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்துக்கொண்டு என்மீது கமிஷனர் ஆபீசில் கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட் டாரு. ஒரு ஆளை வேலைய விட்டு தூக்கணும்னா, அவர் கள் மீது திருட்டுப் பட்டம் சுமத்துறதுதான் அவரோட பழக்கம். "ஒத்த செருப்பு' படத் துக்காக செருப்பா தேஞ்சு உழைச்சதுக்கு இதுதான் பரிசு'' என்றார் வேதனையுடன்.

அண்ணே... பார்த்தி பண்ணே... நீங்களாண்ணே இப்படி? நம்பவே முடியலண்ணே...