பல படங்களுக்கு நடன அமைப்பாளராகப் பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பைக் கதை'. கதாநாயகியாக "வழக்கு எண்' புகழ் மனிஷா நடித்துள்ளார்.
இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.. மே-25ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் பேச
பல படங்களுக்கு நடன அமைப்பாளராகப் பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பைக் கதை'. கதாநாயகியாக "வழக்கு எண்' புகழ் மனிஷா நடித்துள்ளார்.
இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.. மே-25ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ""விஜய் சார் நடித்த "குருவி' படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களைக்கூட கொடுத்துள்ளோம்.. ஆனால் இந்தப் படம் "மைனா' போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்..
நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதே போல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன்.
மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார்போல.. என்ன மாதிரி சிலபேருக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்கன்னு, அந்த கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக் கிறேன்..
தப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள்.. கழுவி ஊற்றுகிறீர்கள். அதேசமயம் நல்ல படங்களைக் கொடுக்கும்போது நீங்கள் அதற்கான வரவேற்பைக் கொடுங்கள்.. இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்'' என்றார் கோபமாக.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, ""இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம்தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும்.
விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கிண்டலடித்தேன்..
ஆனால் "எதிர்நீச்சல்' படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்.. ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு போகவேண்டும்.'' என்றார்.
இயக்குநர் அமீர் பேசும்போது, ""இந்தப் படத்தின் கதைத் தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதைகேட்ட பின் இயக்குநர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன்.. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார்.. ஆனால் ஒரு இயக்குநராக அவரது உறுதியான முடிவை பாராட்டு கிறேன்.
சினிமாவில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் பார்த்த அதே உடல்மொழியுடன் இருப்பார்கள்.. ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா இந்த வரிசைல தினேஷ் மாஸ்டரும் எப்பவும் ஒரேமாதிரியான உடல்மொழியுடன் தான் இருப்பார்.
இந்த நேரத்தில் சத்யம் திரையரங்கு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. சினிமாவில் இசைவெளியீட்டு விழாவை சத்யம் தியேட்டரில் நடத்தவே விரும்புகிறார்கள்.. ஆடியோ விழாக்கள் நடைபெறும் நாளில் அந்த திரையரங்கில் மட்டும் ஷோவை ஒரு அரை மணி நேரம் தள்ளி வையுங்கள். ஏசியை அணைத்து, லைட்டை அணைத்து கெடுபிடி செய்ய அவசியம் இருக்காது'' என்றார்.
படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் பேசும்போது, ""இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க.. என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்..
உனக்கு நாங்க இருக்கோம்ணு ஹீரோக்களும், இயக்குநர்களும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். எல்லாருக்கும் என் நன்றிகள்'' எனக் கண் கலங்கினார்..
விழாவில் தன்னுடைய உதவி யாளருக்காக தயாரிப் பாளராக மாறிய இயக்குநர் அஸ்லமை அனைவ ரும் பாராட்டி னர்.