"சர்கார்' சங்கதியும் வரலட்சுமியின் டெக்னிக்கும்!

/idhalgal/cinikkuttu/sarkar-and-vallakshmis-technique

ந்திய சினிமாவையே மீ டூ சர்ச்சை மிரட்டிக்கொண்டிருக்க, தமிழ் சினிமாவில் வழக்கம்போல் கதைத் திருட்டு சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது. விஜய்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியான "கத்தி' கதை திருட்டு விவகாரம் கோர்ட்வரை போனது. கோர்ட்டுக்கு வெளியே 40 லட்ச ரூபாய் சமசரத்துடன் அமுங்கியது. இப்போது அதே கூட்டணியில் தயாராகி தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் "சர்கார்' கதை என்னுடையது என கதாசிரியர்கள் சங்கத்தில் முறையிட்டிருக்கிறார் வருண் என்கிற உதவி இயக்குநர். சங்கத்தின் தலைவர் கே. பாக்

ந்திய சினிமாவையே மீ டூ சர்ச்சை மிரட்டிக்கொண்டிருக்க, தமிழ் சினிமாவில் வழக்கம்போல் கதைத் திருட்டு சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது. விஜய்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளியான "கத்தி' கதை திருட்டு விவகாரம் கோர்ட்வரை போனது. கோர்ட்டுக்கு வெளியே 40 லட்ச ரூபாய் சமசரத்துடன் அமுங்கியது. இப்போது அதே கூட்டணியில் தயாராகி தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் "சர்கார்' கதை என்னுடையது என கதாசிரியர்கள் சங்கத்தில் முறையிட்டிருக்கிறார் வருண் என்கிற உதவி இயக்குநர். சங்கத்தின் தலைவர் கே. பாக்யராஜ், சில சமசர முயற்சிகள் எடுத்தும் பலனில்லாததால் கோர்ட்டுக்கு போகும் முடிவில் இருக்கிறார் வருண்.

sarkaarvijay

கதை விவகாரம் அப்படி இருந்தாலும் "சர்கார்' பிஸ்னெஸை அமோகமாக நடத்தியிருக்கிறார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையாகியிருக்கிறது "சர்கார்.' தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, எஃப்.எம்.எஸ். என எல்லாம் சேர்த்து 200 கோடிக்கு விலை போயிருக்கிறது "சர்கார்.' இதில் தமிழ்நாடு ரிலீஸ் ரைட்ஸ் மட்டும் 87 கோடி ரூபாய். இந்த ரைட்சை தீவிர தி.மு.க. அபிமானியான, மறைந்த இராம. நாராயணனின் தேனாண்டாள்பிலிம்ஸ்க்கு கொடுத்திருக்கிறார் கலாநிதிமாறன்.

varu

varuவிஜய்யை வைத்து "மெர்சல்' எடுத்த வகையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு சில கோடிகள் கைநழுவிப் போயின. சமீபத்தில் ரிலீஸ் பண்ணிய பா. விஜய் யின் "ஆருத்ரா'-வும் கைகொடுக்கவில்லை. முரளியின் கஷ்டத்தைத் தெரிந்துகொண்ட கலாநிதிமாறன், "சர்க்காரி'-ன் தமிழ்நாடு ரைட்சை கொடுத்ததோடு, விநியோகஸ்தர்களிடம் பிஸ்னெஸ் செய்து, அதன்பின் மொத்தத் தொகையைக் கொடுத்தால் போதும் என பெருந்தன்மையுடன் சொல்லிலிவிட்டாராம். இண்டஸ்ட்ரியில் இதுதான் லேட்டஸ்ட் டாக். முரளிக்கு கலாநிதி போட்ட ஒரே கண்டிஷன் திருப்பூர் சுப்பிரமணிக்கும், அருள்பதிக்கும் விநியோக உரிமையை கொடுக்கக்கூடாது என்பதுதானாம்.

இனிவருவது "வரு' என்கிற வரலட்சுமியின் டெக்னிக் சங்கதி. சில மாதங்களுக்குமுன்பு "ராஜபார்வை' என்ற படம் ஆரம்பிக்கப்பட்டு, கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. பார்வைக் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் வரலட்சுமி. ஆனால் இப்போது அந்த டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் கமல்.

படத்தின் ஷூட்டிங் பாதிக்கட்டத்தைத் தாண்டிய நிலையில், ""கமல் சாரைப் பார்த்துப் பேசிட்டேன். டைட்டிலுக்கு நோ அப்ஜெக்ஷன் சொல்லிட்டாரு. எனவே "ராஜபார்வை'-க்கு நோ பிராப்ளம்'' எனச் சொல்லிய வரலட்சுமி, கமலுடன் தான் எடுத்த ஃபோட்டோவையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டி ருக்கிறார். இதை நம்பி படத்தை வேகவேகமாக முடித்த நிலையில், கமலிட மிருந்து நோட்டீஸ் வந்துள்ளதால் நொந்து போயிருக்கிறார் தயாரிப்பாளர்.

cin301018
இதையும் படியுங்கள்
Subscribe