Advertisment

சாமி பாதி... ஆவி பாதி...

/idhalgal/cinikkuttu/sami-half-spirit-half

னுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை', "காதல் கொண்டேன்', "யாரடி நீ மோகினி', "திருவிளையாடல் ஆரம்பம்', என நான்கு படங்களைத் தயாரித்த ஆர்.கே. புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு "பாண்டி முனி' என்று பெயரிட்டுள்ளது.

Advertisment

sunny

இதில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அ

னுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை', "காதல் கொண்டேன்', "யாரடி நீ மோகினி', "திருவிளையாடல் ஆரம்பம்', என நான்கு படங்களைத் தயாரித்த ஆர்.கே. புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு "பாண்டி முனி' என்று பெயரிட்டுள்ளது.

Advertisment

sunny

இதில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டீஸ்வரி என்ற வேடத்திலும் நடிக்கிறார்.

இன்னொரு நாயகி யாக நிக்கிஷா பட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

Advertisment

ஒளிப்பதிவு- மது அம்பாட், இசை- ஸ்ரீகாந்த் தேவா, கலை- ஸ்ரீமான் பாலாஜி, நடனம்- சிவசங்கர், ஸ்டன்ட்- சூப்பர் சுப்பராயன், எடிட்டிங்- சுரேஷ்அர்ஸ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- கஸ்தூரிராஜா.

இது இவர் இயக்கும் 23-ஆவது படம்.

படம் பற்றி இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியதாவது-""இது வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

kasturirajaசாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்தான் "பாண்டி முனி.'

ghostஅடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்குமுன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம்.

சாமி பாதி, ஆவி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் ஜாக்கிஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்தக் கதைக்கு கிடைத்த முதல் வெற்றி.

படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து நாடுகளிலும் குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களிலும் நடைபெறவுள்ளது'' என்றார்.

இதையும் படியுங்கள்
Subscribe