ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ். தணிகைவேல் முதன்முறையாகத் தயாரித்திருக்கும் படம் "ஒற்றைப் பனைமரம்.'

Advertisment

"நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும்' என்னும் எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருக் கும் இவர், இதற்குமுன் "நேற்று இன்று', "இரவும் பகலும் வரும்', "போக்கிரி மன்னன்' ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

ewA

ஈழத்தில் நடந்த உண்மைச் சம்ப வத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாகி யிருக்கும் "ஒற்றைப் பனைமரம்' 40 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தேர்வாகிசிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

விரைவில் வெளியாக இருக் கும் இப்படத்தின் டிரைலரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட் டார். அஷ்வமித்ரா இசையமைக்க, மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கியிருக்கிறார்.

புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரங் களில் நடித்திருக்கின்றனர்