"இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின்மூலம் இளைஞர்களின் ஜொள்ளு கன்னியாக மாறிய யாஷிகா ஆனந்த் தற்போது "பிக்பாஸ் 2'-வில் பங்கேற்றதன்மூலம் இன்னும் பிரபலமாகி வருகிறார். இதுமட்டுமில்லாமல்; தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் "நோட்டா' படத்திலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தற்போது தம்பி ராமையா தன் மகனை வைத்து இயக்கியுள்ள "மணியார் குடும்பம்' படத்திலும் நடித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதை உறுதிசெய்யும் வகையில் தம்பி ராமையா மகன் தன் தோள்மேல் யாஷிகாவைத் தூக்கிவைத்துள்ளது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது.