ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் சை. கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் "ராட்சசி.'
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந் தெடுத்து நடித்துவருகிறார் ஜோதிகா. நல்ல விமர்சனமும் கமர்சியல்ரீதியிலான வெற்றியும் என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்துவருகிறார். "ராட்சசி' பற்றி இயக்குநர் சை. கௌதம் ராஜிடம் கேட்டபோது, ""ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத்தான் இருப் பாங்க. எனக்கு என்னோட நாலாங் கிளாஸ் நிர்மலா டீச்சர்.ஒவ்வொருத் தருக்கும் இப்படி ஒரு டீச்சரோட பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்ம ளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற, நடக்க வேண்டிய விஷயங் களை எனக்கென்னன்னு இல்லாம, எதிர்த்து நின்னு அத்தனைபேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும். இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி-ன்னு . அவங்கதான் இந்த டீச்சர் "ராட்சசி' கீதா ராணி.
இதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர, வேற யாரும் இவ்வ ளவு கச்சிதமா பண்ண முடி யாது. கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண் ணாங்க, நிறைய டீச்சர் கிட்ட பேசுனாங்க.
அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடி லாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.
இப்ப தமிழ்நாட்டில இருக்குற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழில திபர்கள், விஞ்ஞானிகள் எல்லாரை யும் உருவாக்குனது அரசுப் பள்ளி தான்னு அழுத்தம் திருத்தமா சொல்ல முடியும்.
அரசுப் பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப்பள்ளியில படிக் கிற பசங்களோட தரம் உயரணுங் கிறதுக்காகத்தான், அதை வலிமை யாக பேச இந்த மாதிரி "ராட்சசி'-ங்க வந்தே ஆகணும்.'' என்கிறார் ஆவேச மாக.