ராசாத்தி' ரகசிய சங்கதிகள்!

/idhalgal/cinikkuttu/rasati-secret-societies

மிக விரைவில் உங்கள் "சன் டி.வி.'யில் புத்தம் புதிய மெகா தொடர் "ராசாத்தி' என இருபது நாட்களுக்கு முன்பு இடைவிடாமல், சன் குழும சேனல்களில் பட்டையக் கிளப்பியது விளம்பரம். வரும் திங்கள் கிழமை முதல் நாள்தோறும் இரவு 9 மணிக்கு "ராசாத்தி' என கடந்த ஒரு வாரமாக குரல் கொடுத்து தூள் கிளப்பினார் தூரன் கந்தசாமி.

நடிகர்கள் விஜயகுமார், செந்தில், நடிகைகள் சுலக்ஷணா, நித்யா, மாஜி கவர்ச்சி நடிகை விசித்ரா, டைரக்டர் மனோஜ்குமார் என பெரிய சினிமா நட்சத்திரப் படையே விளம்பரங்களில் ஜொலித்தது. எல்லாரும் எதிர் பார்த்திருந்த செப். 23-ஆம் தேதி இரவு 9 மணிமுதல் சீரியல் பிரியை களுக்கும் பிரியர்களுக்கும் காட்சிதர ஆரம்பித்துவிட்டார் "ராசாத்தி.'

rrr

இந்த "ராசாத்தி'-யைத் தயாரிப்பவர் நெல்லையைச் சேர்ந்த அன்பு குஷ்பு சுந்தர்.சி.யின் ஆவ்னி பிக்சர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவ முள்ளவர். இன்னும் சொல்லப்போனால் சுந்தர். சி.யின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். இப்போதும் ஆவ்னி பிக்சர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தாலும், சுந்தர்.சி குஷ்பு இருவரின் நல்லாசியுடன் "ராசாத்தி'-யை ஆரம்பித்துள்

மிக விரைவில் உங்கள் "சன் டி.வி.'யில் புத்தம் புதிய மெகா தொடர் "ராசாத்தி' என இருபது நாட்களுக்கு முன்பு இடைவிடாமல், சன் குழும சேனல்களில் பட்டையக் கிளப்பியது விளம்பரம். வரும் திங்கள் கிழமை முதல் நாள்தோறும் இரவு 9 மணிக்கு "ராசாத்தி' என கடந்த ஒரு வாரமாக குரல் கொடுத்து தூள் கிளப்பினார் தூரன் கந்தசாமி.

நடிகர்கள் விஜயகுமார், செந்தில், நடிகைகள் சுலக்ஷணா, நித்யா, மாஜி கவர்ச்சி நடிகை விசித்ரா, டைரக்டர் மனோஜ்குமார் என பெரிய சினிமா நட்சத்திரப் படையே விளம்பரங்களில் ஜொலித்தது. எல்லாரும் எதிர் பார்த்திருந்த செப். 23-ஆம் தேதி இரவு 9 மணிமுதல் சீரியல் பிரியை களுக்கும் பிரியர்களுக்கும் காட்சிதர ஆரம்பித்துவிட்டார் "ராசாத்தி.'

rrr

இந்த "ராசாத்தி'-யைத் தயாரிப்பவர் நெல்லையைச் சேர்ந்த அன்பு குஷ்பு சுந்தர்.சி.யின் ஆவ்னி பிக்சர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவ முள்ளவர். இன்னும் சொல்லப்போனால் சுந்தர். சி.யின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். இப்போதும் ஆவ்னி பிக்சர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தாலும், சுந்தர்.சி குஷ்பு இருவரின் நல்லாசியுடன் "ராசாத்தி'-யை ஆரம்பித்துள்ளார் அன்பு.

vv

’பாரதிராஜாவின் "கிழக்குச் சீமையிலே' மற்றும் சத்யராஜ் நடித்த "சேனாபதி' படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எம். ரத்னகுமார்தான் "ராசாத்தி'-க் கும் கதை வசனம் எழுதியுள்ளார். அதே போல் சுந்தர்.சி. டைரக்ட் பண்ணிய முக்கால்வாசி படங்களில் கேமரா மேனாக இருந்த யு.கே. செந்தில்குமார் தான் "ராசாத்தி'-யின் கேமராமேன். பிரபு, கார்த்திக், அஜீத் ஆகியோரை வைத்து ஹிட் படங்களைக் கொடுத்த வரும்- இப்போதும் தமிழ் சினிமா வில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்ப வருமான ராஜ்கபூர்தான் "ராசாத்தி'-யின் டைரக்டர்.

இப்படியெல்லாம் "ராசாத்தி'-க்கு நாம பில்ட்-அப் கொடுக்குறதுல தப்பே யில்லை. ஆனா "ராசாத்தி'-யாக நடிக்கும் பவானி ரெட்டிக்கு அநியாயத்திற்கு பில்ட்-அப் கொடுத்து சீரியல் ரசிகர் களை ஆரம்பத்திலேயே கடுப்படித்தி ருக்கிறார்கள்.

அதாவது ராசாத்தி சின்ன வயசா இருக்கும்போதே அம்மன் சிலை செய்யும் திறமை பெற்றவராம். அந்த அம்மன் சிலை செந்திலின் வீட்டில் இருப்பதை விஜயகுமார் பார்க்கும் போது, அந்த சிலைக்குப் பின்னால் நாகப் பாம்பு காட்சிதருகிறது. "அடி ஆத்தீ ராசாத்தி 'என கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள். அதற் கடுத்து ராசாத்தி பெரியவளானதும் அருள்வாக்கு சொல்கிறார். இவை யெல்லாமே கார்த்திக்- ரேவதி நடித்த "தெய்வவாக்கு', "கிழக்கு வாசல்' படங்களை அப்பட்டமாக காப்பி அடித் திருக்கிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

அதற்கடுத்த ஓவர் பில்ட்-அப் சீன் இது. ஊரில் நடக்கப்போகும் தேர்த் திருவிழா நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக, அக்னி விளக்கு களை உடலைச் சுற்றி கட்டிக் கொண்டு ஊர்வலம் வருகிறார்.

""இங்க பாருடா... என்னோட ராசாத்தி எப்படியெல்லாம் தன்னை வருத்திக் கிறா'' என ஹீரோ உச் கொட்டுகிறார்.

அதற்கடுத்த ஓவர் பில்ட்-அப் சீன் இது. குடும்பத்தினருடன் கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார் ராசாத்தி. அப்போது மணக்கோலத்தில் ஒரு ஜோடி ஓடிவருகிறது. ""அக்கா நீங்க வந்து தாலி எடுத்துக் கொடுக்காமா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்'' என மணப்பெண் அடம்பிடித்து அழுகிறார்.

உடனே கல்யாண மண்டபம் செல்கிறார் ராசாத்தி. அங்கே இருக்கும் பெரிய மனிதர்கள் எல்லாம் எழுந்து "வாங்கம்மா ராசாத்தியம்மா' என பவ்யமாகக் கும்பிடுகிறார்கள். ராசாத்தி தாலி எடுத்துக் கொடுக்க, இனிதே நடக்கிறது திருமணம். தாலி கட்டி முடித்ததும் உள்ளே வருகிறார் வில்லி விசித்ரா. ""என்கிட்ட உன் பையன் வேலை பார்த்து கைநீட்டி சம்பளம் வாங்குறான்.

ஆனா ராசாத்தி தாலி எடுத்துக்கொடுத்து கல்யாணத்த நடத்திட்டல்ல. பரவாயில்லை மாப்பிள்ளை- பொண்ணை என் வீட்டிற்கு கூட்டிட்டு வா'' என மணமக னின் அப்பாவிடம் சொல்லிவிட்டு, கர்ணக் கொடூரமாக கண்களை உருட்டி மிரட்டி விட்டுச் செல்கிறார் விசித்ரா.

இதற்கடுத்த சீன்தான் கொடுமையிலும் கொடுமை, பெருங்கொடுமை! வீட் டிற்கு வரும் புதுமணத் தம்பதிகளிடம் ஆவேசமா கப் பேசியபடியே, ராசாத்தி எடுத்துக்கொடுத்த தாலியை அரிவாளால் அறுத் தெரிந்துவிட்டு, "இப்ப நான் தாலி எடுத்துக் கொடுக்கி றேன், கட்டு'' என கட்டளை யிடுகிறார் விசித்ரா. வில்லி விசித்ராவின் கேரக்டர் அப் படியே சத்யராஜ்- மீனா நடித்த "தாய்மாமன்' படத்தில் வரும் ஜெயசித்ராவை நினைவுபடுத்துகிறது.

பாலில் அடித்து சத்தியம், கைநீட்டிப் பேசும் ஆவேசம், முறைப் பெண்களுக்கு மாமன்கள் மஞ்சள் தண்ணி ஊத்துவது என அடுத் தடுத்து வரப்போகும் எபிசோடு களுக்காக போடப்படும் க்ளிப்பிங் குகள் அப்படியே பல தமிழ் சினிமாக்களின் அப்பட்டமான உல்டா. அது சரி, டி.வி. சீரியல்களைப் பார்த்து பல டைரக்டர்கள் சினிமா எடுக்கிறார்கள். சினிமாவைப் பார்த்து பல சீரியல்களை உல்டா அடிக்கிறார்கள்.

சரி- அது எப்படியோ கிடக்கட் டும்- இப்ப நம்ம "ராசாத்தி 'கதைக்கு வருவோம்.

ராசாத்தியாக நடித்திருக்கும் பவானி ரெட்டிக்கு வயது 29. இவருக்குப் பூர்வீகம் கர்நாடக மாநிலம் பெல்காம் என்றாலும், படித்தது... வளர்ந்ததெல்லாம் ஆந்திர மாநிலம்தான். இப்போது தெலங்கானா. தெலுங்கு டி.வி. சீரியல் களில் பிரபலமான பவானி ரெட்டி, சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். இவருடன் தெலுங்கு சீரியல்களில் ஹீரோவாக நடித்த பிரதீப்குமார் என்பவருடன் காதலாகி கல்யாணமும் செய்துகொண்டார்.

பவானி ரெட்டிக்கும் பிரதீப்குமாருக் கும் இடையே என்ன பிரச்சனையோ, 2017 மே மாதம் 3-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் பிரதீப்குமார். அன்றிலிருந்து ரொம்பவே மனம் உடைந்த நிலையில் இருந்த பவானி ரெட்டி, பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, 2018-ல் ஆனந்த் அஜய் என்பவரை இரண்டாவது கணவராக திருமணம் செய்துகொண்டார்.

தமிழிலும் பல டி.வி. சீரியல்களில் நடித்திருந்தாலும் இப்போது "ராசாத்தி'- மூலம் பவானி ரெட்டியின் சீரியல் மார்க் கெட் ஜிவ்வென உயர்ந்துள்ளது.

-பரமு

cini081019
இதையும் படியுங்கள்
Subscribe