"மூடர்கூடம்' படத்திற்குப்பின் நவீன், கதை- திரைக்கதை- வசனம் எழுதி டைரக்ட் பண்ணி ஹீரோவாக நடித்திருக்கும் படம் "அலாவுதீனின் அற்புத கேமரா'. இதில் ஹீரோயின் "கயல்' ஆனந்தி. தனக்கு நடந்த கொடுமையைச் சொல்கிறார் நவீன்...
"""அலாவுதீனின் அற்புத கேமரா' திரைப்படம் வெளியிட தயாராக இருக்கும் நிலையில், ஃப்ளாஷ் பிலிம்ஸ் நிறுவனத் தின் சுவர்ணா சேதுராமன் எனது படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கி யுள்ளார். "அலாவுதீனின் அற்புத கேமரா' படத்திற்காக அவர் 44.5 லட்சம் ரூபாய் கொடுத்த தாகவும், நான் அதைத் திருப்பித் தரவில்லை என்றும் பொய்வழக்கு தொடுத்துள்ளார். உண்மையில் ஃப்ளாஷ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இந்தத் திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
2016-ல் ஃப்ளாஷ் பிலிம்ஸ் சார்பில் ராகுலன், என்னுடைய மேனேஜர் வாசுதேவன் ராமமூர்த்தியை அழைத்து "நவீன் எங்களுக்கு ஒரு படம் செய்து தருவாரா?' என்று கேட்டார். ""அபெக்ஸ் ஃபார்மசிட்டிகல்ஸ் நிறுவனத்தின் வாரிசான விசாகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும். விசாகன் அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார்'' என்று கூறினார். முதலில் நான் சம்மதிக்கவில்லை. பிறகு என் மேனேஜர் என்னை கன்வின்ஸ் செய்ததும், அவர்கள் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய் அட்வான்சைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒரே வாரத்தில் நான் அந்த ஐந்து லட்சம் அட்வான்சை ராகுலனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, எனக்கு இந்த படம் வேண்டாம் என்று கூறினேன். ராகுலன் என்னிடம், ""நீங்கள் இந்தப் படத்தை செய்தே ஆகவேண்டும். உங்களுக்கு எல்லாவிதமான சுதந்திரமும் இங்கு கிடைக்கும். உங்கள் கிரியேட்டிவ் எல்லைக்குள் யாரும் நுழைய மாட்டார்கள்'' என்று சொல்லி என்னை கன்வின்ஸ் செய்தார். மேலும் ஒரு பர்ஸ்ட்காப்பி ஒப்பந்தம் தயார் செய்து கையெழுத்திடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் காப்பி ஒப்பந்தம், ஃப்ளாஷ் பிலிம்ஸ் நிறுவனத் திற்கும் என்னுடைய ஒயிட் ஷேடோஸ் நிறுவனத்திற்கும் இடையில் போடப் பட்டது. விசாகன், அவருடைய தாய்மாமா சுவர்ணா சேதுராமன் ஆகியோருடையது இந்த ஃப்ளாஷ் பிலிம்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் விசாகனை ஹீரோவாக வைத்து ஏற்கெனவே இரண்டு படங்களை ஆரம்பித்து, பல லட்சங்கள் செலவு செய்து, பின்னர் ட்ராப் செய்திருந்த செய்தியை அவர்களே என்னிடம் சொல்லியிருந்தார்கள்.
ஆகஸ்ட் 23-2016 அன்று ஃபர்ஸ்ட் காப்பி ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, என்னுடைய ஒயிட் ஷேடோஸ் நிறுவனத்தின் சார்பாக, நான் அவர் களுக்கு ஒரு படம் ஃபர்ஸ்ட் காப்பி முறையில் தயாரித்து இயக்கித் தரவேண்டும். கதை, திரைகதை, வசனம், இயக்கம், இசை, படத்தின் நீளம் போன்ற கிரியேட்டிவ் முடிவுகளை இயக்குனர் நவீன் மட்டுமே எடுக்க முடியும் என்பது அந்த ஒப்பந்தத்தின் முக்கிய பகுதி. ஒப்பந்தத்தின்படி நான் எட்டு மாதங் களுக்குள் ஸ்கிரிப்ட் எழுதி படம் எடுத்து முடித்து ஃபர்ஸ்ட் காப்பி தர வேண்டும். அதேபோல் ஃப்ளாஷ் பிலிம்ஸ் சரியான நேரத்தில் படத்திற்கான பட்ஜெட்டை கொடுத்து படப் பிடிப்பு நடப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நான் எட்டு மாதங்களுக்குள் படத்தை முடிக்காவிட்டாலும், அவர்கள் படத்திற்கான பட்ஜெட்டை முழுதாக தராமல் போனா லும் ஒப்பந்தத்தை மீறியதாக கருதப்படும்.
அக்டோபர் 31-2016 அன்று விசாகனுடைய ஸ்டுடியோவில், நான் அவருக்கு முழு ஸ்கிரிப்டை சொன்னேன். இரவு ஒன்பது மணிக்கு ஆரமித்து நள்ளிரவு ஒரு மணி வரை ஸ்கிரிப்ட் சொன்னேன்.
நான் கதை சொல்லும்போது எங்களுடன் விசாகனுடைய சித்தப்பா ராகுலன் மற்றும் எனது மேனேஜர் வாசுதேவன் ராமமூர்த்தி இருந்தனர். கதை கேட்டு முடித்தவுடன் ராகுலன் ""குட் ஸ்கிரிப்ட்'' என்றார். அதற்கு விசாகன் ""சித்தப்பா, எதுக்கு இந்த கஞ்சத்தனம்? இப்படி ஒரு ஸ்கிரிப்ட நான் இதுவரைக்கும் கேட்டதும் இல்ல; பாத்ததும் இல்ல. இந்த ஸ்கிரிப்டுக்காகத்தான் கடவுள் என்னோட முந்தைய படங்கள தடை பண்ணிருக்கார்னு நினைக் கறேன்'' என்று புளகாங்கிதம் அடைந்து பாராட்டினார்.
நவம்பர் மாதம் படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம் என்று நான் சொன்னேன். ஒரு வாரத்திற்குப் பிறகு டீமானிடைசேஷன் அமல்படுத்தப்பட்டதால், ஜனவரியில் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று அவர்கள் கூறினார்கள். நானும் நிலைமையைப் புரிந்துகொண்டு பொறுமையாக இருந்தேன்.
திடீரென ஒருநாள் சுவர்ணா சேதுராமன், எங்களை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்தார். ""விசாகன் அமெரிக்கா செல்கிறான். இனி இந்தப் படம் நடக்காது. நீங்கள் வாங்கிய preproduction பணத்தில் 20 லட்சம் ரூபாயை திருப்பித்தர வேண்டும்'' என்று கூறினார். நான், "படத்தைத் தொடராவிட்டால் எனக்கு நஷ்டமாகும். படப்பிடிப்பிற்கான வேலைகளுக்காக பணம் செலவு செய்திருப்பதால், படப்பிடிப்பு தொடராமல் போனால் அந்த செலவுகள் வீணாகப் போகும். இந்தப் படம் கைவிடப்பட்டால் என்னுடைய எட்டு மாத உழைப்பு வீணாகும். அதற்கு என்ன இழப்பீடு? என்றும் கேட்டேன். மேலும் இந்தப் படத்திற்காக எனக்கு வந்த மூன்று பெரிய பட வாய்ப்புகளை நான் இழந்திருந்தேன். அதற்கு சுவர்ணா சேதுராமன் என்னை மிரட்டும் தொனியில் பேசினார். பொய்வழக்கு போட்டு என்னுடைய "அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தின் ரிலீசுக்கு தடை வாங்கியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்திலும் என்மீது பொய்யான புகார் கொடுத்தார்'' என பொங்கித் தீர்த்தார் நவீன்.
நவீன் குற்றச்சாட்டுக்கு சொர்ணா சேதுராமன் என்ன பதில் சொல்றார்னா...
""எனது ஃப்ளாஷ் பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது "மூடர்கூடம்' நவீன் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி "கதையின் பவுண்ட் ஸ்கிரிப்ட் தருகிறேன்' என்று என்னிடம் 45 லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம் போட்டு அதன்படி நடந்து கொள்வதாக கூறினார்.
சுமார் 10 மாதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வர வில்லை. ஆனால் படத்தை முடித்து கொடுப்பதாக கூறினார். அவரது அனைத்து செலவுகளும் எனது தயாரிப்பு அலுவலகம் மூலமாகவே செய்யப்பட்டது.
நான் இதன் பிறகு 27.04.2017- ல் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக புகார் கொடுத்தேன் அப்போது பல முறை அழைத்தும் நவீன் வரவில்லை. கடைசியாக ஒருநாள் வந்து விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறிவிட்டு அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.
நான் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பட விஷயமாக கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். சட்டப்படி கோர்டில் சந்திப்பதை விட்டுவிட்டு ஊடகத்தின் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி திசை திருப்பி, இதிலிருந்து விடுபட திட்டமிடுகிறார். ஏற்கெனவே பல புகார்கள் அவர்மேல் இருப்பதாக அறிகிறேன். என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு லொகேஷன் பார்க்கப் போனதாக கதை சொல்லி ஏமாற்றுகிறார்.
பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.'' என போட்டுத்தாக்கினார் சேதுராமன்.
முக்கியக்குறிப்பு: இந்த சொர்ணா சேதுராமன், ரஜினியின் (இளைய மகள் சௌந்தர்யாவின் கணவர்) மருமகன் விஷாகனின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது.