கடந்த 9-ஆம் தேதி சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் "காலா' படத்தின் ஆடியோ ரிலீஸ் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், விழாத்திடலையே திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.
பத்திரிகையாளர்களுக்கு ஸ்பெஷல் பாஸ் வழங்கப்பட்டாலும் ஃபோட்டோ எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதி இல்லை என முன்கூட்டியே சொல்லிவிட்டார் "காலா'-விற்கும் ரஜினிக்கும் பி.ஆர்.ஓ.வாக இருக்கும் ரியாஸ் அஹமது.
"காலா'-வில் நடித்த நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் ரஜினிக்கும் டைரக்டர் ரஞ்சித்துக்கும் தயாரிப்பாளர் தனுஷுக்கும் நன்றி சொன்னார்கள். கடைசியாக ரஜினி பேசிமுடிக்கும்போது, இரவு 9.50 மணி. ஆனால் 10 மணிக்கெல்லாம் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் விழாவில் பேசிய ரஜினியின் தனிப்படங்கள் உட்பட சில படங்களை செம ஃபாஸ்டாக அனுப்பிய பி.ஆர்.ஓ. ரியாஸ், மறுநாள் பொழுதுவிடிவதற்குள் நூற்றுக்கணக் கான ஃபோட்டோக்களை அனுப்பி ஆச்சர்யப்படுத்திவிட்டார்.
அந்த ஃபோட்டோக்கள் இங்கே விஷுவல் டேஸ்ட்டுக்காக.