சௌத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் "இ.பி.கோ 30.'

இந்தப் படத்தில் துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலீஸ் அதிகாரி வேடமேற்கிறார் கஸ்தூரி.

இளம்காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். மற்றும் வையாபுரி, ராபின் பிரபு, போண்டாமணி வின்ஸ்குமார் நடிக்கிறார்கள்.

ka

Advertisment

ஒளிப்பதிவு- தண்டபாணி, இசை-

அலெக்ஸ்பால், எடிட்டிங்- காளிதாஸ், கலை- மணிமொழியான், நடனம்- தினா, ஸ்டண்ட்- தீப்பொறி நித்யா, பாடல்கள்- முத்துவிஜயன், தயாரிப்பு மேற்பார்வை- ராஜசேகர், இணைத் தயாரிப்பு- ஆர். பிரபு, தயாரிப்பு- செங்கோடன் துரைசாமி, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சலங்கை துரை. கரண் நடித்து வெற்றிபெற்ற "காத்தவராயன்' படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநரிடம் பேசியபோது...

""கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு, யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது.செத்தவன் யார் என்றும் தெரியவில்லை. கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை. காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடிவந்த இளம் ஜோடிகள்... வெளியே போனால் ஜாதி கொலையாகக்கூடிய வாய்ப்புள்ள பிரச்சினை.

இன்னொரு படுகொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து நிற்கிற திரைக்கதை. அந்த முடிச்சை அவிழ்க்கிற துர்கா ஐ.பி.எஸ்தான் கஸ்துரி.

ரொம்பவும் பவர்புல்லான வேடம் அவருக்கு... நிறைவாக செய்திருக்கிறார்'' என்றார்.