"சூதுகவ்வும்' படத்தில் இடம்பெற்ற "கம் னா கம்' பாடல்மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன்பின் "எனக்குள் ஒருவன்', "உரியடி', "மரகதநாணயம்', "கதாநாயகன்' உள்ளிட்ட பல படங
"சூதுகவ்வும்' படத்தில் இடம்பெற்ற "கம் னா கம்' பாடல்மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன்பின் "எனக்குள் ஒருவன்', "உரியடி', "மரகதநாணயம்', "கதாநாயகன்' உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான "கனா' படத்தில் ஜி.கே.பி எழுதிய "வாயாடி பெத்த புள்ள' பாடல் வெளியானது.
இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய மகள் ஆராதனா வைகோம் விஜயலஷ்மி ஆகியோர் பாடியுள்ளனர்.
"வாயாடி பெத்த புள்ள' பாடல் வெளியான கணம் ஆகியோர் முதல் இப்பாடலிலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமுக வலைத்தளங்களில் பிரபலம் ஆனது.
தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். ""இப்படிப்பட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேன்மேலும் பல நல்ல படைப்புகளைப் படைக்கத் தூண்டும். இந்த பாராட்டுகள் என்னை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்ல தூண்டும் தூண்டுகோல்'' என்கிறார் பாடலாசிரியர் ஜி.கே.பி.