வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், இரு இளம்பெண்கள் ஒரு இசை நிகழ்ச்சியில் எதேச்சையாக சந்திக்கிறார்கள். பைக் டிராவலரான சந்தோஷ் பிரதாப் புடன் மற்ற நால்வரும் பயணிக்கிறார்கள்.
பயணத்தின்போது, ஒரு ஹெஸ்
வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், இரு இளம்பெண்கள் ஒரு இசை நிகழ்ச்சியில் எதேச்சையாக சந்திக்கிறார்கள். பைக் டிராவலரான சந்தோஷ் பிரதாப் புடன் மற்ற நால்வரும் பயணிக்கிறார்கள்.
பயணத்தின்போது, ஒரு ஹெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கும்போது, பஞ்சராக்ஷரம் என்ற புத்தகத்தை எடுத்து ஒரு கேம் ஆடுகிறார் கள். அந்தப் புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்திலுள்ள பேராவை தொட்டுப் படிக்கவேண்டும் என்பதுதான் கேம். கேம் முடிந்து பயணம் முடிந்து அவரவர் வீட்டுக் குச் சென்றுவிடுகிறார்கள். அதன் பின் அவர்கள் வாழ்க்கையில், அந்தப் புத்தகத்தில் படித்த சில கெட்ட விஷயங்கள் நடக்கின் றன. அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பது "பஞ்சராக்ஷரம்.'
இப்படி ஒரு அமானுஷய க்ரைம், திரில்லர் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. நேர்த்தியான காட்சி அமைப்பு, மிரட்டலான பின்னணி இசை, அபாரமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட் டிங் என பெரிய பெரிய டைரக்டர் களுக்கு அமைந்த டீம்போல, புது டைரக்டரான பாலாஜி வைரமுத்துவுக்கு "பஞ்சராக்ஷரம்' டீம் அமைந்துள்ளது. படத்தில் நடித்திருக்கும் அத்தனைபேரும் தங்கள் பங்களிப்பை சிரத்தை யுடன் கொடுத்துள்ளனர்.
வெல்டன்! கீப்-இட்-அப் பாலாஜி வைரமுத்து.