ரினச் சேர்க்கைக்கு சட்டரீதியாக அங்கீகாரம் கொடுத்துவிட்டது உச்சநீதிமன்றம். இந்தத் தீர்ப்பை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். நடிகைகள் குஷ்பு, ஸ்ரேயா, த்ரிஷா, நடிகர் ஆர்யா ஆகியோர் "வாட் அ பியூட்டி ஜட்ஜ்மென்ட். இதுதான் சுதந்திரம்' என துள்ளிக் குதித்தனர்.

bits

trisha

சினிமா பிரபலங்களின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் நடிகர் கரிகாலன். ""சில திரை உலக சகோதர- சகோதரிகள் ஓரினச் சேர்க்கையை ஆதரித்துப் பேசியிருப்பது மனவேதனை தருவதாக இருக்கிறது. வளரும் இளம்தலை முறையினருக்கு நாம் முன்னுதாரண மாகத் திகழ வேண்டும். எது சுதந்திரம்? சிவப்பு விளக்கு எரிந்த பின்னும் பயணத்தைத் தொடர்வதுதான் சுதந்திரமா? இயற்கைக்கு மாறான உறவுப் பயணம் மன நெருக்கடியையோ, மரணத்துக்கு ஏதுவானவற்றையோ நிகழ்த்திவிடாதா?'' என நியாயமாகக் கேள்வி கேட்டி ருக்கிறார் கரிகாலன்.

Advertisment