பெங்களூரைச் சேர்ந்த நிக்கி கல்ராணிக்கு இப்போது வயது 26. தாய் மொழி கன்னடம் என்றாலும், 2014-ஆம் ஆண்டு "1983' என்ற மலையாளப் படம்மூலம் சினிமாவில் அறிமுகமனார் நிக்கி கல்ராணி. மலையாளத்தில் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது தெலுங்கு சினிமா உலகில் நுழைந்த நிக்கி கல்ராணி, 2015-ல் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக "டார்லிங்' படத்தின்மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

உயரம் கொஞ்சம் கம்மி என்றாலும் அழகான முக அமைப்பு, சிவப்பு நிறம், பளீர் சிரிப்பு இவற்றாலும் "கவர்ச்சி அதிகம் வேணுமா... அதிகம்... அதிகம் வேணுமா... எதுன்னாலும் ஓ.கே!' என்ற பாலிஸியாலும் மூன்றுமொழி சினிமாவிலும் சொல்லிக்கொள்ளும்படி மார்க்கெட்டைப் பிடித்தார்.

nn

Advertisment

தமிழில் "கோ-2', "மரகதநாணயம்', "கலகலப்பு-2' என நிக்கி கல்ராணியின் மார்க்கெட் போய்க் கொண்டிருந்தபோது தான், "ஹரஹர மகாதேவகி' வந்தது.

அடல்ட்ஸ் காமெடி யான இப்படத்தில் செம செக்ஸியாகக் கலக்கியிருப்பார் நிக்கி கல்ராணி. அதிலும் ஹீரோ கௌதம் கார்த்திக்கை "கடவுளே கடவுளே' கோலத்தில் பார்த்துவிட்டு ஒரு ரியாக்ஷன் கொடுத்திருப்பார் பாருங்க, அடடா ஆஹா ஓஹோ ரகம்!

அந்த "ஹரஹர மகாதேவகி'-யைத் தயாரித்தவர் ஸ்டுடியோ க்ரீன் அதிபர் கே.இ. ஞானவேல்ராஜா. நிக்கி கல்ராணி போட்ட "கெட்ட ஆட்டம்' ஞானவேல்ராஜா வுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், நிக்கியே கதி என கிடந்தார். சென்னை கொட்டிவாக்கத்தில் நிக்கி கல்ராணிக்கு தனி வீடு வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு மிகமிக நெருக்கமானது ஞானவேல்ராஜா- நிக்கி கல்ராணியின் டீப் நட்பு. இது போக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெரிய ஷூட் ஒன்றை நிரந்தரமாக வாடகைக்கு எடுத்து நிக்கியை தங்கவைத்த ஞானவேல்ராஜா, சில பல காரியங்கள் சாதித்தார்.

Advertisment

கன்ட்ரோல் இல்லாமல் போய்க்கொண்டிருந்த மேற்படி இருவரின் நெருக்கத்தைக் கேள்விப்பட்டும் பார்த்தும் பதறிப்போன ஞானவேல்ராஜா வின் மனைவி நேகா, ""அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படும் யாரும் நல்லாவே இருக்கமாட்டார்கள்'' என்ற தொனியில் ட்விட்டரில் பொளந்து கட்டினார். ஒரு பெரிய நடிகரின் உறவினர் என்பதால், அந்த நடிகர்மூலம் பஞ்சாயத்துப் பேசி, நிக்கி கல்ராணியுடனான நட்பை கட் பண்ணினார் நேகா.

nn

கொஞ்ச நாட்கள் நல்ல பிள்ளைபோல இருந்த ஞானவேல்ராஜா, அதற்குமேல் இருக்க முடியாமல் நிக்கியுடன் ரகசிய சந்திப்பை நடத்திக் கொண்டிருக்காராம்.

ஞானவேல்ராஜா கதை அப்படி என்றால், இது அதை விட பெருங்கூத்துக் கதை, கெட்ட ஆட்டத்தில் சூப்பர் ஆட்டக் கதை! பாரம்பரிய மிக்க சினிமா கம்பெனி அது. எம்.ஜி.ஆரை வைத்து மெகா மெகா ஹிட் படம் எடுத்த கம்பெனி. ரஜினியை வைத்தும் ஹிட் படம் கொடுத்த கம்பெனி. ரஜினிக்கு சம்பள அட்வான்ஸாக தங்கக் காசுகளை வழங்கியவர் அந்தக் கம்பெனியின் பெரியவர்.

அந்தப் பெரியவர் மறைவுக்குப் பின், சில வருடங்கள் படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தனர்.

நிலைமை கொஞ்சம் சுமுகமானதும் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கினார் பெரியவரின் வாரிசு. அந்த வாரிசுக்குப்பின் அவரது வாரிசு இப்போது படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.

அந்தக் கம்பெனியில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக பவர்ஃபுல்லாக இருப்பவர் தென்காசியைச் சேர்ந்த ஒருவர். அந்த ஏரியாவில் சினிமா போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர், சென்னைக் குக் குடிபெயர்ந்து இந்த சினிமா கம்பெனிக்குள் நுழைந்து மெல்ல மெல்ல வளர்ந்து வாரிசின் வாரிசை கைக்குள் போட்டுக்கொண்டு, சில செப்படி வித்தைகளை செய்தார். இவர் என்ன சொல்கிறாரோ மறுக்காமல் தலையாட்டும் அளவுக்கு வாரிசு "அது'வே கதி என கிடக்கிறாராம்.

சூட்சுமம் அறிந்து சுருட் டும் வித்தை தெரிந்த இவரின் கருணையால் வாரிசுக்கும் அறிமுகமானார் நிக்கி. தெலுங்கு தேச நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்களின் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்புக்கு தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்தவருக்கு லம்பாக ஒரு தொகையும் கைமாறியதாம்.

சந்திப்பு தித்திப்பா இருக் கும்னு நினைத்தார் வாரிசு. ஆனால் நிக்கியின் கெட்ட ஆட்டத்தால் ஏடாகூடமாக ஒரு சம்பவம் நடந்துவிட்டதாம். இதை வெளியில் சொல்லமுடியாமல் இப்போது ரொம்பவே அவஸ்தைப்படுகிறாராம் வாரிசு. நிக்கியால் வாரிசுக்கும் அவரது மனைவிக்குமிடையே கடும் சண்டையாம்.

அந்தக் கம்பெனியின் படம் ஒன்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போவதாகச் சொன்னார்கள். இப்போது நவம்பர் ரிலீஸ் என்கிறார்கள்.

நிக்கியின் அக்கா சஞ்சனா கல்ராணியும் இப்போது "ஆட்ட'க்களத்தில் குதித்துவிட்டாராம்.

-ஈ.பா.பரமேஷ்வரன்