Advertisment

வம்பாகச் சிக்கிய நயன்தாரா

/idhalgal/cinikkuttu/nayantara-who-became-enthralled

தியேட்டர் ஓனர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிவிட்டு, தியேட்டர்களைத் திறந்தாலும் ஈ ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 30 வருஷம் கழிச்சு மார்ச் 30-ஆம் தேதி கமல் நடித்த ‘"காக்கிச்சட்டை'யை ரிலீஸ் பண

தியேட்டர் ஓனர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிவிட்டு, தியேட்டர்களைத் திறந்தாலும் ஈ ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 30 வருஷம் கழிச்சு மார்ச் 30-ஆம் தேதி கமல் நடித்த ‘"காக்கிச்சட்டை'யை ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள். போற போக்கப் பார்த்தா "கந்தன் கருணை', "லவகுசா', "அகத்தியர்' "சம்பூர்ண ராமாயணம்'’ மாதிரியான பக்திக் காவியங்களையும், "அவளோட ராவுகள்', "மாமனாரின் இன்பவெறி', "குஞ்ஞச்சன் கும்மாளம்' மாதிரியான ஏடாகூடப் படங்களையும் ரிலீஸ் பண்ணுவார்கள் போல.

Advertisment

nayanthara

nayathara

இப்படியே யோசிச்சிக் கிட்டிருந்தா எப்படி என யோசித்த தியேட்டர் ஓனர்கள், புதுத் தமிழ்ப்படம் தானே ரிலீசாகக் கூடாது, மலையாளப் படத்தை டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணுவோம் என்ற முடிவோடு, மம்முட்டி- நயன்தாரா நடித்த ‘"புதிய நியமம்' படத்தை "வாசுகி'யாக்கி, விளம்பரங்களில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரிலீஸ் பண்ணிவிட்டார்கள். இதனால் நயன்தாராமீது செம கடுப்பில் இருக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். தியேட்டர் ஓனர் களின் சூழ்ச்சிவலையில் வம்பாகச் சிக்கியிருக்கிறார் நயன்தாரா.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe