"தௌலத்' படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் பேசும்போது, ""பெரிய ஹீரோக்கள் நடித்த படம் மட்டும் பேசப்படும் சூழல் உள்ளது. சரியான கதையோடும் தரத்தோடும் நிறைய சின்னப்படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் வெளியில் வரவேண்டும். இந்தப் படத்தின் தலைப்பு "டௌலத்'. "டௌலத்' என்றால் உருது மொழியில் செல்வம் என்று பொருள். இந்தப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காமல் படத்தைப் பற்றிப் பேசக்கூடாது.

vv

ஆனால் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர் ஜீவா, நடிகர் சங்கத்தைப் பற்றி மறைமுகமாக சொன்னார். நான் நேரடியாகவேச் சொல்கிறேன். விஷாலைப் பற்றி எனக்கு இப்போதுதான் தெரியும். "அயோக்யா' படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர்.

அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்தேன். முதலில் நாம் ஒழுக்க மாக இருக்கவேண்டும். அதற்குப் பின் பதவிக்கு வரவேண்டும்'' என விஷாலை போட்டுத் தாக்கினார்.