2009-ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் "நாடோடிகள்.'
வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் "நாடோடிகள் -2' உருவாகிவருகிறது. இதில் சசிகுமார்- அஞ்சலிலி மற்றும் பரணி, அதுல்யா, எம்.எஸ். பாஸ்கர், நமோநாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ், கோவிந்தமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரை யில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர்.
யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத் துள்ளார்.