மூன்றாண்டுகளுக்கு முன்பு டைரக்டர் மிஷ்கின், பெரும் புகழ்பெற்ற சினிமாக் கம்பெனியான ஏவிஎம். குடும்பத்தைச் சேர்ந்த மைத்ரேயா என்ற இளைஞரை ஹீரோவாக்குகிறேன் என்று சொல்லி ஒன்றரைக் கோடி ரூபாய் வாங்கினார்.
மைத்ரேயாவின் அப்பாதான் படத்தின் தயாரிப்பாளர். ஆனால், மிஷ்கினோ, மைத்ரேயாவிற்குச் சொன்ன கதையைத் தான், இப்போது உதயநிதி- நித்யா மேனனை வைத்து "சைக்கோ' என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். கொடுத்த பணத்தை மைத்ரேயா கேட்டபோதெல் லாம் மிரட்ட ஆரம்பித்தார் மிஷ்கின். வேறுவழியில்லாமல் கோர்ட்டுக்குப் போனார் மைத்ரேயாவின் அப்பா.
தான் சீட்டிங் போட்டது வெட்ட வெளிச்சமாகிவிட்டதால் வேறுவழியே இல்லை மிஷ்கினுக்கு. அதனால், இப்போதைய நிலைமை என்னன்னா...
மைத்ரேயாவிடம் ஒன்றரைக் கோடி ரூபாயை நவம்பர் மாதத்திற்குள் திரும்பத் தந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத் திடம் உறுதிமொழி கொடுத் திருக்கிறார் மிஷ்கின்.
அந்த ஒன்றரைக் கோடியைக் கொடுத்தால் தான் "சைக்கோ'-வை ரிலீஸ் பண்ணமுடியும் என்ற நிலை இருந்ததால், இரு மாதங் களுக்கு முன்பு 50 லட்ச ரூபாய்க் கான செக்கை கோர்ட்மூலம் மைத்ரேயாவிற்குக் கொடுத்துள் ளார். ஆனால், மிஷ்கினின் அக்கவுண்டில் பணம் இல்லாத தால் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது.
இதனால் மீண்டும் கோர்ட்டுக்குப் போனது மைத்ரேயா தரப்பு. நீதிபதியும் டென்ஷனாகி விட்டார்.
மிஷ்கின்மீது கோர்ட் அவ மதிப்பு வழக்கு போட மைத்ரேயா தரப்பு தயாரானபோது தான், மீண்டும் சரண்டரானார் மிஷ்கின். 50 லட்ச ரூபாயும் க்ளியர் ஆனது. ""மீதி ஒரு கோடி ரூபாயை எப்ப தருவீங்க?'' என சமீபத்தில் மைத்ரேயா கேட்டபோது, ""இப்போது "துப்பறிவாளன் -2' ஷூட்டிங்கிற்காக லண்டன்ல இருக்கேன். டிசம்பர் கடைசில வந்துருவேன். வந்ததும் பேசிக்கலாம்'' என மைத்ரேயாவை சமாதானப் படுத்தியுள்ளார் மிஷ்கின்.
சரி, இப்ப தான்யா ரவிச்சந்திரனின் தடாலடி மேட்டருக்கு வருவோம். மைத்ரேயா விடம் சொன்ன கதைக்குத்தான் தான்யா ரவிச்சந்திரனை வரவழைத்து ஆடிஷன் நடத்தி னார் மிஷ்கின். அபிராமி என்ற இயற்பெயரை, மிஷ்கின் சொன்னதற்காக தான்யா ரவிச் சந்திரன் என மாற்றிக்கொண்டார். என்ன நினைத்தாரோ அல்லது நினைத்தது நடக்க வில்லையோ என்னவோ, ""நான் விஷாலை வைத்து "துப்பறிவாளன்' படத்தை ஸ்டார்ட் பண்ணப்போறேன். அதனால் அடுத்த சான்ஸ் இருந்தா பார்ப்போம்'' என தான்யாவைக் கைகழுவினார் மிஷ்கின்.
இதற்கிடையே தான்யாவின் சூப்பர் ஃபோட்டோக்களைப் பார்த்த டைரக்டர் ராதா மோகன், "அடடா! இந்தப் பொண்ணுக்கு ஹோம்லி லுக் ஃபேஸ் இருக்கே!' என முடிவு செய்து, அப்போது அருள்நிதிக்கு ஜோடி யாக "பிருந்தாவனம்' படத்தில் தான்யாவை ஹீரோயினாக கமிட் பண்ணினார்.
"பிருந்தாவனம்' ஷூட்டிங் நடந்து கொண்டி ருந்தபோதே' பன்னீர்செல்வம் டைரக்ஷனில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக "கருப்பன்' படத்தில் கமிட் ஆனார் தான்யா. படம் முழுக்க குடும்பக் குத்து விளக் காக வந்து அசத்தியிருப்பார் தான்யா.
ஆனால், "கருப்பனி'ன் கலெக்ஷன் ரிசல்ட்டோ சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாததால் தான்யாவிற்கு பெரிய நடிகர்களுடனோ, பெரிய டைரக்டர்களின் படத்திலோ நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இப்போது சிபிராஜூக்கு ஜோடி யாக "மாயோன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்... நடித்துக் கொண்டிருக்கிறார்... நடித்துக் கொண்டே இருக்கிறார்.
பார்த்தார் தான்யா... இப்படியே போனா... மார்க்கெட் சூடு பிடிக்காது என்ற முடிவுடன், செம சூடான ஃபோட்டோக்களை தனது ஃபேஸ்புக்கில் அப்டேட் பண்ணி கிளுகிளுக்க வைத்திருக் கிறார். அந்த சூடான ஸ்டில் களைத்தான் "சினிக்கூத்து' வாசக ரசிகர்களுக்கு இங்கே வழங்கி யிருக்கிறோம்.
இன்னொரு கூடுதல் செய்தி என்னன்னா... மிஷ்கினிடம் பணம் கொடுத்து இன்னமும் போராடிக் கொண்டிருந்தா லும், சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் மைத்ரேயா. இப்போது, "அந்த நாள்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள மைத்ரேயா, தமிழில் சூப்பர் ஹிட் அடித்த "பரியேறும் பெருமாள்' படத்தின் கன் னட ரீமேக்கில் கதிர் கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் கர்நாடக மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் ஆரம்பமாகவுள் ளது.
-ஈ.பா.பரமேஷ்வரன்