"இருக்குறவனுக்கு ஒரு வீடு தைரியமாக இல்லாதவனுக்கு பல வீடு'ன்னு சொல்வார்கள். ஆனா நம்ம தமிழக அமைச்சர்கள் பலபேருக்கு ஏகப்பட்ட வீடு, வாசல்கள் அமைஞ்சு அமோகமாக இருக்கிறார்கள்.
தலைநகர் சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு தொகுதியின் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அவர். பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல; எப்போதுமே பரபரப்பாக இருக்கும் அந்த நகரில், ஆரம்பத்தில் வீடியோ கடை நடத்தியவர் அவர்.
(ஒரு வீடியோ கடை பார்ட்டிதான் இன்னொரு பார்ட்டிக்கு வினையா வந்த கதையெல்லாம் இருக்கு.) வட்டம், பகுதின்னு படிப்படியா கட்சிப் பொறுப்பில் வளர்ந்து வார்டு கவுன்சிலரானார் நிஜமானவரு.
அப்போது அமைச்சர்களாக இருந்த பலபேருக்கு "ஆல் இன் ஆல் அழகு ராஜா' இவர்தான். கோலிவுட் ஏரியாவிலும் செல்வாக்கை வளர்த்துக் கொண்டு, முகம்தெரிந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டிலிருந்து பிரபல ஹீரோயின்கள் வரை ஏகப்பட்ட பேர் இவரது நட்பு வளையத்தில் இருப்பவர்கள். ஆந்திராவரை இவரது ஆளுமை எல்லை நீண்டிருக்கிறது. இப்போதும் இருக்கிறது.
மந்திரி சபையில் இருக்கும் பலருக்கும் இவர் தான் "சகல சந்தோஷங்'களுக்கும் நிவாரணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதாவது புத்தாண்டுக்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த மினிஸ்டர் ஒருவர், ஷீரடி சாய்பாவை தரிசிக்கச் சென்றுள்ளார். தனியாப் போனா தரிசனம் திருப்தியா இருக்குமா? அதனால நம்ம எம்.எல்.ஏ.விடம் கொக்கியைப் போட்டார் மந்திரி. ஆகட்டும் மந்திரி யாரே எனச் சொன்ன எம்.எல்.ஏ., விவாகரத்தான இரண்டெழுத்து சீனியர் நடிகையையும், கொளுக்மழுக்கென இருக்கும் துணை நடிகை ஒருவரையும் மந்திரி போவதற்கு முன்னாலே ஷீரடிக்கு அனுப்பி வைத்தார்.
மந்திரியும் எம்.எல்.ஏ. வும் போனபிறகு, கோவிலுக்குச் சொந்த மான ஹெஸ்ட் ஹவுசில் இருவரும் திவ்ய தரிசனம் பார்த்திருக்கிறார்கள். தரிசனமெல்லாம் முடிந்து செட்டில்மென்ட் நடக்கும்போது, நடிகைக்கும் துணை நடிகைக்கும் மல்லுக் கட்டாகி, ஷீரடி வீதியே நாறியிருக்கிறது. இவர் களின் குடுமிப்பிடி சண்டையை சிஸ்டரின் பிரதரின் ஆள் ஒருவர் லைவ்வாகப் பார்த்துவிட்டு, வாட்ஸ்- அப்பில் போட்டு நாறடித்து விட்டார்.
மந்திரி, எம்.எல்.ஏ., நடிகை இவர்கள் மூவரும் பொங்கலுக்கு முன்னாலேயே "வெரி வெரி ஹேப்பி குஜால்' பொங்கல் வைத்திருக்கிறார் கள். இதையெல்லாம் படிச்சிட்டு நீங்கல்லாம் ஏக்கத்துல பொங்கி ராதீகப்பு.