மீ டூ. இதுதான் இப்ப இந்தியாவுல பெட்ரோல்- டீசல் விலை பிரச்சினையவிட பெரும் பிரச்சினையா இருக்கு. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழி சினிமா ஹீரோக்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர்மீது மீ டூ புகார்களை சரமாரியாகக் கிளப்பிக்கொண்டிருக்கி றார்கள் ஹீரோயின்கள்.
ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் பின்னணிப் பாடகிகள் மீ டூ-வை ஆரம்பித்திருக்கிறார்கள். உலகப் புகழ்பெற்ற தமிழ் சினிமா கவிஞர் வைரமுத்துமீது 15 வருடங்கள்முன் நடந்ததாக சொல்லி புழுதி வாரித் தூற்றியிருக்கிறார் பாடகி சின்மயி. ட்விட்டரில் மீ டூ-வைக் சின்மயி கிளப்பியதும் லீனா மணிமேகலை டைரக்டர் சுசி கணேசன்மீதும், பாடகி ஸ்ரீரஞ்சனி கடம் சங்கர் என்னும் இசைக் கலைஞர்மீதும் மீ டூ அட்டாக்கை ஆரம்பித்தார்கள்.
இத்தனை வருஷம் கழிச்சி கவிஞர் வைரமுத்துமீது சின்மயி புழுதிவாரித் தூற்றுவது ஏன் எனக் கேட்பவர்களும் உண்டு. எத்தனை வருஷம் ஆனா என்ன? தப்பு நடந்துச்சா? நடக்கலையா எனக் கேட்பவர்களும் உண்டு. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலிலியல் வன்முறைகளையோ, கிரிமினல் குற்றங் களையோ யாராக இருந்தாலும் ஆதரிக்கமாட்டார்கள்.
ஆனா பொது வெளியில் ஆண்களுக்கும் சரி; பெண்களுக்கும் சரி- சில கட்டுப் பாடுகளும் விதிமுறைகளும் இருப்பதையும் மறுக்க முடியாது. வைரமுத்து, சுசி கணேசன் போன்ற பிரபலங்களால் பாலிலியல் தொல்லைக்கு ஆளானதாகச் சொல்லப்படும் சின்மயி, லீனா மணிமேகலை மற்றும் ஸ்ரீரஞ்சனி, "சொல்வதெல் லாம் உண்மை' நிகழ்ச்சியை டி.வி.யில் நடத்திய வரும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றிணைந்து "தென்னிந்திய திரைத்துறை' பெண்கள் மையம்' என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளனர்.
இந்த அமைப்பினர், பத்திரிகையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒண்ணு நடந்துச்சு. மீ டூ குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மற்றவர்களின் தோற்ற, நடை- உடை- பாவனைக்கும் சின்மயியின் தோற்றத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்க. மடியில நாயை வச்சுக்கிட்டு, காரை ஓட்டிக்கிட்டு வந்த ஸ்டைல், போட்டுக்கிட்டு வந்த காஸ்ட்யூம், மீடியாக்களிடம் பேசியபோது அவரின் பாடிலாங்குவேஜ் இதெல்லாம் பார்த்தா சாதாரண ஜனங் களுக்கு என்ன தோணும்? சரி, மேல்தட்டு வர்க்கம், அப்படித்தான், அதுக்குத்தான்னு நினைக்க மாட்டானா? பத்து வீடு மாறுனதால பாஸ்போர்ட் தொலைஞ்சு போச்சு, அது கிடைச்சுதுன் னா வைரமுத்துவை விடமாட்டேன்னு சின்மயி சொல்றார்.
பாஸ்போர்ட்ல சுவிட்சர்லாந்து நாட்டு சீல்தான் இருக்கும். மத்ததுக்கெல்லாமா சீல் இருக்கும்? எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுக்கே இது தோணும்போது, சின்மயியிக்குத் தெரியாமப் போனதுதான் பெரும்கூத்து.
நமக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் வௌங்கவே மாட்டேங்குதுங்க.
அதாவது இதுவரை பத்திரிகை பேட்டிகளிலும் சரி; இப்போதைய டிரெண்டான மீ டூ-விலும் சரி- சினிமா உலகில் ஹீரோயின் சான்சுக்காக படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கு.
ஆனா இதுவரைக் கும் எனக்கு அந்த அனுபவம் இல்லைன்னு எல்லா ஹீரோயின் களும் சொல்லிலிட் டாங்க. இதுதாங்க நமக்கு பெரிய டவுட்டு. ராதாரவி சொன்ன மாதிரி, மீ டூ விவகாரம் எல்லாமே பிளாக்மெயில் சமாச்சாரம் தான்னு நமக்கும் தோணுது.
-ஈ.பா. பரமேஷ்
படங்கள்: ம. குமரேஷ்