கருப்பு- வெள்ளைக் காலத்தின் தமிழ் சினிமா (எல்லா மொழி சினிமாவிலும்தான்) ஹீரோயின்கள் பெரும்பாலும் நல்ல பீக்கில் இருக்கும்போதே தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் தொழிலதிபரான கணவரின் தொழில் டல்லடிக்கும்போது அவர்களின் இல்லற வாழ்க்கையிலும் பிரச்சினைக் காற்று பலமாக அடிக்கும்.
மீண்டும் சினிமா ஃபீல்டிற்குள் என்ட்ரி யாவார்கள். சினிமா மரபுப்படி அம்மா, அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைக்கும். சில நடிகைகளோ, ""உன்னோட நடிப்புத்திறமை யைப் பூட்டி வைக்காதே,'' சவாலானா கேரக்டர்களை உன்னாலதான் பண்ண முடியும். நீ நடிச்சே ஆகணும்னு என்னோட ஹஸ்பெண்ட் சொன்னதால நடிக்கவந்தேன்'' என்பார்கள்.
அப்படிப்பட்ட நடிகைகளின் கடைசிக் காலம் ரொம்பவே கஷ்டமாக நகரும். தமிழ் சினிமாவில் இதற்கு உதாரணங்கள் சாவித்ரி, ஸ்ரீவித்யா. சாவித்ரி வாழ்க்கையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது சினிமா வாகவே வந்துவிட்டது. பெரும் தொழிலதிபர் என நம்பி கழுத்தை நீட்டிய ஸ்ரீவித்யாவின் வாழ்க்கைக் கதைதான் ரொம்பவே பரிதாபம். ஸ்ரீவித்யாவின் உழைப்பை மட்டுமே நம்பிய உன்னதத் தொழிலதிபர்தான் அவரின் கணவர்.
ஸ்ரீவித்யா தனது சொந்த சம்பாத்தியத்தில், சென்னை மகாலிங்க புரம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் வாங்கிப் போட்டிருந்த வீடுகள், புறநகரில் வாங்கிப்போட்டிருந்த நிலங்கள் எல்லாம் ஏலத்திற்குப் போகும் அளவுக்கு உட்கார்ந்து சாப்பிட்டே ஏப்பம் விட்டவர் அந்தத் தொழிலதிபர் கணவர். அதைவிடக் கொடுமை, ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு, கேரள மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்து கவனித்துக்கொள்ள யாருமின்றி அனாதைபோல் கிடந்தார். ஸ்ரீவித்யா வின் நிலையைக் கேள்விப்பட்டு, அவரைக் க
கருப்பு- வெள்ளைக் காலத்தின் தமிழ் சினிமா (எல்லா மொழி சினிமாவிலும்தான்) ஹீரோயின்கள் பெரும்பாலும் நல்ல பீக்கில் இருக்கும்போதே தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் தொழிலதிபரான கணவரின் தொழில் டல்லடிக்கும்போது அவர்களின் இல்லற வாழ்க்கையிலும் பிரச்சினைக் காற்று பலமாக அடிக்கும்.
மீண்டும் சினிமா ஃபீல்டிற்குள் என்ட்ரி யாவார்கள். சினிமா மரபுப்படி அம்மா, அக்கா, அண்ணி வேடங்கள்தான் கிடைக்கும். சில நடிகைகளோ, ""உன்னோட நடிப்புத்திறமை யைப் பூட்டி வைக்காதே,'' சவாலானா கேரக்டர்களை உன்னாலதான் பண்ண முடியும். நீ நடிச்சே ஆகணும்னு என்னோட ஹஸ்பெண்ட் சொன்னதால நடிக்கவந்தேன்'' என்பார்கள்.
அப்படிப்பட்ட நடிகைகளின் கடைசிக் காலம் ரொம்பவே கஷ்டமாக நகரும். தமிழ் சினிமாவில் இதற்கு உதாரணங்கள் சாவித்ரி, ஸ்ரீவித்யா. சாவித்ரி வாழ்க்கையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது சினிமா வாகவே வந்துவிட்டது. பெரும் தொழிலதிபர் என நம்பி கழுத்தை நீட்டிய ஸ்ரீவித்யாவின் வாழ்க்கைக் கதைதான் ரொம்பவே பரிதாபம். ஸ்ரீவித்யாவின் உழைப்பை மட்டுமே நம்பிய உன்னதத் தொழிலதிபர்தான் அவரின் கணவர்.
ஸ்ரீவித்யா தனது சொந்த சம்பாத்தியத்தில், சென்னை மகாலிங்க புரம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் வாங்கிப் போட்டிருந்த வீடுகள், புறநகரில் வாங்கிப்போட்டிருந்த நிலங்கள் எல்லாம் ஏலத்திற்குப் போகும் அளவுக்கு உட்கார்ந்து சாப்பிட்டே ஏப்பம் விட்டவர் அந்தத் தொழிலதிபர் கணவர். அதைவிடக் கொடுமை, ஸ்ரீவித்யா புற்று நோயால் பாதிக்கப்பட்டு, கேரள மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்து கவனித்துக்கொள்ள யாருமின்றி அனாதைபோல் கிடந்தார். ஸ்ரீவித்யா வின் நிலையைக் கேள்விப்பட்டு, அவரைக் கடைசியாக பார்த்தது கமல்ஹாசன்தான்.
அதன்பின், சரோஜாதேவி, வாணிஸ்ரீ, லதா, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, அம்பிகா, ராதா, பூர்ணிமா, மீனா ஆகியோரெல்லாம் "கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
தொழிலதிபர்களைத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் போய் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களை நடிகைகள் திருமணம் செய்துகொண்டு, ஃபாரீனில் செட்டிலாகிவிடுவார்கள். சில நடிகைகளுக்கு லண்டன், அமெரிக்கா டாக்டர்கள் கிடைக்கக் கூடும். சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் ஹார்டுவேர்டாக மாறும்போது, குடும்ப வாழ்க்கையில் குழப்பமாகி, மீண்டும் கோலிவுட்டில் லேண்டாகி, நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால், பல நடிகைகளுக்கோ திருமணம் என்ற ஒன்று அமையாம லேயே ஏமாற்றத்துடனும் கசப்புடனும் வாழ்க்கையை நகர்த்துவதுதான் பெரும் சோகம். இந்த சோக சரித்திரத்துக்குச் சொந்தமான சில ஹீரோயின்களைப் பற்றிய அரிய தகவல்கள்தான் இங்கே வரிசை கட்டுகின்றன.
அர்ச்சனா, வயது 50: டைரக்டர் பாலுமகேந்திரா படங்களின் ஆஸ்தான ஹீரோயின். இவருடன் ஹீரோவாக நடித்தவர்களில் பெரிய ஹீரோ என்றால் மைக் மோகன்தான். மற்ற எந்த பெரிய ஹீரோக்களுடனும் இவர் ஜோடி போட்டதில்லை. திருமணம் செய்ய இவருக்கு ஆசை இருந்தாலும், அதற்கு பெரிய தடையாக இருந்தவர் பெரிய டைரக்டர் ஒருவர்தான். அந்த விரக்தியிலேயே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஷோபனா, வயது 50: நாட்டியப் பேரொளி பத்மினியின் உறவினர். ரஜினி, கமல், விஜய காந்த், சத்யராஜ் என பெரிய ஸ்டார் களுடன் ஜோடிபோட்டவர். இவர் நடித்த படங்கள் முக்கால்வாசி ஹிட்தான். நாட்டியத்தின்மீது அதிக நாட்டம் கொண்ட ஷோபனாவிற்கு திருமணத் தின்மீது நாட்டம் இல்லாமல் போய் விட்டதுதான் சோகம்.
பூஜாகுமார், வயது 42: டைரக்டர் கேஆரின் "காதல் ரோஜாவே' என்ற படத்தில் அறிமுகமா னார். அதன் பின் எந்தப் படத்தில் நடித்தார் என்பது நமக்கு நினைவில்லை. கலை நிகழ்ச்சி நடத்துவதற் காக அமெரிக்கா போனவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். பல வருட இடை வெளிக்குப்பின் "விஸ்வரூபம்' படத்தில் தனக்கு ஜோடியாக்கி னார் கமல். படத்தின் பாதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்த தால் பூஜாவுக்கும் வசதியாகப் போய் விட்டது. அதன்பின், "உத்தம வில்லன்' படத்திலும் தனக்கு ஜோடி யாக்கினார் கமல். பூஜாகுமார் சென்னை வந்தால் கமலின் பாதுகாப்பில்தான் இருப்பார்.
அமெரிக்காவிலும் நல்ல வசதியாகத் தான் இருக்கிறார். அப்படியிருந்தும் இவருக்கு ஏன் திருமணமாகவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.
சோனா, வயது 40: கவர்ச்சிக் களத்தில் குதித்துவிட் டாரென்றால் இவரை கன்ட்ரோல் பண்ணவே முடியாது. இவருக்கு நன்றாக நடிக்கத்தெரிந்தும், இவரிடம் கவர்ச்சியையே எதிர்பார்த்தார்கள் டைரக்டர்கள். இப்போதுகூட மலையாளத்தில் பிஸியான நடிகைதான் சோனா. சென்னையில் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகிறார் சோனா.
மும்தாஜ், வயது 40 : சகலகலா வல்லவர் டி.ஆரின் கண்டுபிடிப்பு. "பிக்பாஸ்' நிகழ்ச்சியின் பிரபலம், "குஷி' படத்தில் வரும் ""கட்டிப்புடி கட்டிப்புடா'' பாடலில் பட்டை யைக் கிளப்பியவர். "கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையாத்தான் இருக்கு! ஆனா அது நடக்கலையே' என தனது சோகத்தை தனக்கு நெருக்கமான தோழிகளிடம் சொல்லி புலம்புவாராம். தனது அண்ணனின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் மும்தாஜின் திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது, அதே சினிமா உலகைச் சேர்ந்த அவருக்கு அருகிலேயே இருக்கும் இருவர்தானாம்.
ரேவதி; வயது 50 பிரபல தயாரிப்பாளர் பாலாஜியின் மகன் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து சில ஆண்டுகள் மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது இவர்களின் இல்லற வாழ்க்கை. எந்தப் பிரச்சினை இவர்களின் வாழ்க்கைச் சக்கரத்தில் குறுக்கிட்டதோ, திடீரென குடும்ப வண்டி பிரேக்டவுன் ஆகிவிட்டது. நடிகையைக் கற்பழித்த வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப்பிற்கு எதிராக மலையாள ஹீரோயின்கள் போராட்டத்தில் இறங்கியபோது முன்னணியில் நின்றவர் ரேவதி. தமிழகத்தில் இருக்கும் முற்போக்கு சிந்தனைகொண்ட நடிகைகளுடன் கரம் கோர்த்து நிற்பவர். அப்படிப்பட்ட ரேவதி, சமீபத்தில், ""வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தப்பு, திருமணம் செய்துகொண்டதுதான்'' என ஓப்பனாக ஒத்துக்கொள்ளும் அளவுக்கு திருமணத்தின்மீது கசப்பாக இருந்திருக்கிறார்.
வழக்கம்போல் ரிடையர்டு நடிகைகள் போகும் டி.வி. சீரியல் பக்கம் ஒதுங்கிவிட்டார் ரேவதி. சமீபத்திய கொடுமை என்னன்னா, "ஜாக்பாட்' படத்தில் மொட்டை ராஜேந் திரனுக்கும் ரேவதிக்கும் ரொமான்ஸ் சீன் இருந்ததுதான்!
கிரண், வயது 38: விக்ரமிற்கு ஜோடியாக, டைரக்டர் சரண் இயக்கிய "ஜெமினி' படத்தில் அறிமுகமானவர். கமலுடன் நடித்த "அன்பே சிவம்' இவருக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்தது. பிரசாந்துடன் ஜோடிபோட்ட "வின்னர்' அப்போது வசூலில் சுமார் ரகம் என்றாலும், இப்போதும் காமெடி சேனல்களில் "கைப்புள்ள' வடிவேலு வரும்போதெல்லாம் கிரணைப் பார்க்கலாம். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் சொந்த ஊரான மும்பை ஒதுங்கிவிட்டார். சும்மா இருந்தால் சும்மா இருக்கமுடியாதே. அதனால் இந்த வயதிலும் கிளுகிளு போஸ் கொடுத்த போட்டோக்களை கோடம் பாக்கத்தில் உலவவிட்டு சான்ஸ் வேட்டையாடிவருகிறார்.
டைரக்டர் சுந்தர். சி.க்கு ரொம்ப வும் பிடித்த நடிகை.
அனுஷ்கா; வயது 37: யோகா மாஸ்டரான இவருக்கு சொந்த ஊர் பெங்களூரு என்றாலும், தெலுங்கு சினிமாவில் நுழைந்து, அங்கிருந்து தமிழுக்கு வந்தவர். இவரை அழைத்துவந்தவர் சுந்தர்.சி.தான். தெலுங்கு ஹீரோ பிரபாஸை பல வருடங்களாகக் காதலித்து நெருக்கமாக இருந்தார். கல்யாணம் வரை போனது இவர்களது காதல். யார் கண்பட்டதோ, கைபட்டதோ காதல் புட்டுக்கிருச்சு. இடையில் கொஞ்ச வருஷம், அமலாவின் கணவர் நாகார்ஜுனாவுடன் கிசுகிசுக் கப்பட்டார். இவரின் உயரத்திற்கும் உடல் வாகுக்கும் ஏற்ற "பொருத்'தமான "சரி'யான தொழிலதிபர்கள் கிடைப்பது கஷ்டம்தான். ஆனாலும் மகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைத்து பேரன்- பேத்தியைப் பார்க்கும் ஆசை இவரின் பெற்றோருக்கு இருக்கத்தானே செய்யும்!
த்ரிஷா வயது 36: துணை நடிகையாக சினிமாவில் நுழைந்து, ஹீரோயினாக புரமோஷன் ஆனவர். சினிமா உலகில் ஹீரோயின் களுக்கு வரும் டிஸ்கஷன் அழைப்பு களையெல்லாம் திறமையாக சமாளித்தது இவரின் அம்மா உமாதான். இதனாலேயே த்ரிஷாவின் அப்பா கிருஷ்ணன் இவர்களிடமிருந்து விலகி ஒரு ஓட்டலில் மேனேஜர் வேலை பார்த்து, சமீபத்தில் இறந்தும் போய்விட்டார். தெலுங்கு சினிமா உலகில் புகழ்பெற்ற குடும்பத்தின் ராணா டகுபதியும் த்ரிஷாவும் ரொம்பவே டீப் லவ் பண்ணினார்கள். ஆனால் டகுபதியின் குடும்பத்தார் லவ்விற்கு பிரேக் போட்டனர். நிச்சயதார்த்தத்திற்கு முன்பே முறிந்தது இவர்களது காதல்.
அடுத்ததாக வந்தவர் தயாரிப்பாளர் வருண்மணியன். ஏற்கெனவே மனைவியை விவாகரத்து பண்ணிய மணியன்- த்ரிஷா நிச்சயதார்த்தம் நடந்தது. த்ரிஷாவுக்கு வைரமோதிரம், வைர நெக்லசெல்லாம் போட்டார் மணியன். ""என்னடா இது மணியன், ஓவரா மணி ஆட்டுறாரே'' என கோலிவுட்டே கூடிக்கூடிப் பேசியது.
ஆனால் த்ரிஷாவை வைத்து மணியன் போட்ட கணக்கு வேறுமாதிரி என்பதால் கல்யாணம் கேன்சல், கேன்சல்.
டகுபதியும் மணியனும் தன் வாழ்க் கையில் விளையாடிய விரக்தியில் வெளிநாட்டுத் தீவுகளுக்கு அடிக்கடி போய் "ரிலாக்ஸ்' பண்ணிவிட்டுத் திரும்புகிறார்.
""நான் கண்ணை மூடுறதுக்குள்ள ஒன்னய மணக்கோலத்துல பார்க்கணும் தாயீ...'' என கண்ணீர்விட்டுக் கொண்டி ருக்கிறார் த்ரிஷாவின் அம்மா உமா.
-ஈ.பா. பரமேஷ்வரன்
(வரும் இதழில் இன்னும் சில நடிகைகள்)