மருத்துவத்துறையில் இருக்கும் மாஃபியா கும்பலைப் பற்றிய படம் "மனுஷனா நீ.' படத்தைத் தயாரித்து கதை எழுதி டைரக்ட் பண்ணியிருந்தவர் கஸாலி. கடந்த 16-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. எல்லாப் படங்களையும் திருட்டு வி.சி.டி. எடுக்கும் கும்பல் "மனுஷான நீ'-யை மட்டும் விட்ருமா என்ன?
ஆனாலும் கஸாலி உஷாராகி, நாலாப்பக்கமும் கழுகுப்பார்வை பார்த்துக் கொண்டே இருந்தார். அவரின் பார்வையில் சிக்கியது, "மனுஷனா நீ'-யின் திருட்டு வி.சி.டி. இதைப் பார்த்து டென்ஷனான கஸாலி, தயாரிப்பாளர்கள் சங்கப்புள்ளிகளிடம் (ஏன்னா சங்கத் தலைவர் விஷால் இப்ப எங்க இருக்கார்னே தெரியல) ஓடினார். அப்படியா எனக் கேட்டுவிட்டு அசால்ட்டாக இருந்துவிட்டனர் சங்கப்புள்ளிகள்.
சங்கத்த நம்புனா சமாதிதான்னு நினைச்ச கஸாலியே களத்துல இறங்குனார். கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் பிரிண்டிலிருந்துதான் திருட்டு வி.சி.டி. எடுத்துருக்காய்ங்கன்னு தெரிஞ்சு ஒரு பத்திரிகை சப்போர்ட்டுடன் போலீசில் புகார் கொடுத்து தியேட்டர் ஓனரை அரெஸ்ட் பண்ண வச்சுட்டாரு கஸாலிலி. ஆனா தயாரிப்பாளர்கள் சங்கமோ, அப்படியா சிவாஜி செத்துட்டாராங்கிற ரேஞ்சுக்கு செம ஆக்டிவா இருக்கு. மனுஷங்களாய்யா நீங்கன்னு கொதிச்சுப் போய்க்கிடக்காரு கஸாலி.