ஆம்பளைங்களே பார்க்க அறுவெறுப்பான படம். ""என்ன கருமம்டா இது'' என எரிச்சலான படம். இப்படியாப்பட்ட பெருமைக்குரியது சமீபத்தில் ரிலீசான "90 எம்.எல்.' என்ற மாபெரும் "காவியம்.'
கடந்த 3-ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை. மதுரை வெற்றி- லக்ஷன் தியேட்டர் "90 எம்.எல்.' ஹவுஸ்ஃபுல் ஆனது. தெரிந்தோ, தெரியாமலோ, இல்ல யாரும் சொல்லலையோ என்னவோ, ஐந்து பெண் ரசிகைகள் வந்துவிட்டார்கள். டைட்டில் முடிந்து படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே படத்தின் லட்சணத்தைப் புரிந்துகொண்ட, இரண்டு பெண்கள் விருட்டெ
ஆம்பளைங்களே பார்க்க அறுவெறுப்பான படம். ""என்ன கருமம்டா இது'' என எரிச்சலான படம். இப்படியாப்பட்ட பெருமைக்குரியது சமீபத்தில் ரிலீசான "90 எம்.எல்.' என்ற மாபெரும் "காவியம்.'
கடந்த 3-ஆம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை. மதுரை வெற்றி- லக்ஷன் தியேட்டர் "90 எம்.எல்.' ஹவுஸ்ஃபுல் ஆனது. தெரிந்தோ, தெரியாமலோ, இல்ல யாரும் சொல்லலையோ என்னவோ, ஐந்து பெண் ரசிகைகள் வந்துவிட்டார்கள். டைட்டில் முடிந்து படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே படத்தின் லட்சணத்தைப் புரிந்துகொண்ட, இரண்டு பெண்கள் விருட்டென தியேட்டரைவிட்டு வேகவேகமாக வெளியேறினார்கள்.
படம் போறபோக்கும், அதில் வரும் டயலாக்குகளும் எல்லைமீறிப் போய்க்கொண்டிருந்ததையும், ரசிகர்களின் மோசமான கமெண்டுகளையும் கேட்டு கதிகலங்கிப்போன மீதமிருந்த பெண்களும் இடைவேளைவிட்டு, படம் போட ஆரம்பித்ததும் தெறித்து ஓடினார்கள். மதுரையில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் "90 எம்.எல்.' படம் ஓடிய தியேட்டர்களிலெல்லாம் இதே கதிதான். படமும் இரண்டே நாட்களில் தியேட்டரைவிட்டே ஓடியது தனிக்கதை.
எல்லாம் சரிங்க, படத்துல கதை இருக்கான்னு கேக்குறீகளா? ஓவியா மற்றும் ஐந்து பெண்களின் சதை இருக்கும்போது கதை எதுக்குன்னு டைரக்டர் அழகிய அசுரா நினைச் சிருக்கலாம்போல. அழகிய அசுரான்னா ஆம்பளைன்னு நினைச்சுராதீக. அனிதா உதூப் என்ற பெயர் கொண்ட பெண்தான் இவர். இந்த அனிதா உதூப் யாருன்னா, சென்னை கானாத்தூரில் இருக்கும் பிரபல மால் மல்டிப்ளக்ஸ் தியேட்டரான மாயாஜால் ஓனரின் மகள்தான் இந்த அனிதா உதூப்.
படத்தில் ஓவியா என்ட்ரி ஆனதுமே சரக்கு வாடை குப்பென தூக்குகிறது. ஓவியா குடியிருக்கும் ஃப்ளாட்டில் வசிக்கும் நான்கு பெண்களும், ஓவியாவுடன் நட்பானதும் எல்லா சீன்களிலும் சரக்கு, கஞ்சா என தூள் கிளப்புகிறார்கள். பூத் பங்களா, ரிமோட் என அவர்கள் பேசும் டயலாக்குகளெல்லாம் காது கூசும் ரகம். கல்யாணம் பண்ணாமலேயே எல்லாம் பண்ணலாம் என்பது படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ஓவியாவின் பாலிஸிதான்.
"பிக்பாஸ்' வீட்டில் அறிமுகமான நடிகர் ஆரவ்வுடன் காதலும் கத்தரிக்காயும் இல்லை, வெறும் நட்புதான் என சமீபத்தில் மறுத்தார் ஓவியா. ஆனால் ஈ.சி.ஆர்.ரோட்டில் 40 ஆயிரம் ரூபாய் வாடகையில் பங்களா எடுத்து, ஆரவ்வும் ஓவியாவும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்கிறார்கள். இதுபோக ஓவியாவின் கால்ஷீட் சமாச்சாரங்களையும் மற்ற சமாச்சாரங்களையும் பக்காவாக கவனித்துக் கொள்வதும் ஆரவ்தான்.
ஒருவேளை டைரக்டர் அனிதா உதூப்பும் இதேமாதிரி பழக்கமும் வழக்கமும் கொண்டவரோ என்னவோ? இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, "90 எம்.எல்.' படத்தை மாயாஜாலில் 40 ஷோ போட்டதால், சேரனின் "திருமணம்' படத்திற்கு வெறும் 4 ஷோக்கள் ஒதுக்கி சேரனை வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.
ஓவியாமீதும் அனிதா உதூப்மீதும் போலீசில் கம்ப்ளெய்ண்ட் பண்ணுமளவுக்கு நாறிக்கிடக்கிறது "90 எம்.எல்.' சமாச்சாரம்.
-பரமேஷ்