இயக்குனர் பா. இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் ""கூகை திரைப்பட இயக்கம்"" எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காகப் பெரும் நூலகம் ஒன்றை உருவாக்
இயக்குனர் பா. இரஞ்சித் திரைத்துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் ""கூகை திரைப்பட இயக்கம்"" எனும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காகப் பெரும் நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் நண்பர்கள் உதவியோடு நூலகம் ஒன்றைத் துவங்கியிருக்கிறார்.
சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் கூகை திரைப்பட இயக்கம் அமைப்பின் அலுவலகத்தை "சாய்ரட்' பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு, இயக்குநர் ராம், லெனின் பாரதி, மாரிசெல்வராஜ், உள்ளிட்ட திறைத்துறை சார்ந்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகை குஷ்பு, ""இந்த நூலகம் உதவி இயக்குநர்களுக்கு மட்டுமல்ல, இயக்குநர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலைத் தரும். இந்த நூலகத்தை திறந்திருக்கும் இயக்குநர் பா. இரஞ்சித்திற்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.