தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் அமைப்பின் நிறுவனர் உமர் பாரூக்கின் நினைவுநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய டைரக்டர் பா.ரஞ்சித், ""தமிழகத்தில் சாதிக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ள பகுதி தஞ்சை டெல்டா பகுதி. அதிலும் ரா
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாளில் நீலப்புலிகள் அமைப்பின் நிறுவனர் உமர் பாரூக்கின் நினைவுநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய டைரக்டர் பா.ரஞ்சித், ""தமிழகத்தில் சாதிக் கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்துள்ள பகுதி தஞ்சை டெல்டா பகுதி. அதிலும் ராஜராஜ சோழன் காலத்தில் மிகப்பெரிய சூழ்ச்சிசெய்து தலித் நிலங்கள் பறிக்கப்பட்டன. இதையெல்லாம்விடக் கொடுமை ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றி, மங்கள விலாஸ் என பெயர் வைத்துக்கொண்டு மிகப்பெரிய அயோக்கியத்தனமும் நடந்தது'' என கொளுத்திப் போட்டார்.
உடனே ஆரம்பமானது ரஞ்சித்துக்கு எதிரான கலகக்குரல்களும் ஆதரவான அன்புக் குரல்களும். "சாதியின் அடிப்படையிலும் பெண்களை இழிவுபடுத்தியும் பேசியிருக்கும் ரஞ்சித்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டுக் கைது செய்ய வேண்டும்' என தஞ்சை எஸ்.பி. மகேஷ்வரனிடம் மனுகொடுக்கப்பட்டது.
"ரஞ்சித் என்பதால்தான் இத்தனைபேர் அவர்மீது பாய்கிறார்கள்' என்கின்றன ரஞ்சித்துக்கு ஆதரவான குரல்கள்.
நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கருணாஸோ, ""சாதி அடையாளத்தையே தலைக்கவசமாய் தூக்கிக் கொண்டு திரிகிறார் ரஞ்சித். வரலாறு தெரியாமல் உளறுகிறார்'' என ஆவேசமானதுடன், ராஜராஜ சோழன் காலத்தில் பெண்கள் எவ்வாறு கண்ணியமாக நடத்தப்பட்டார்கள் என்பதையும் பட்டியலிலிட்டி ருக்கிறார்.
முன்ஜாமீனுக்கு முயற்சித்திருக்கிறார் ரஞ்சித்.
சாதி படுத்தும்பாடு பேப்பாடு... பெரும்பாடா இருக்கு...