"மரிஜுவானா' படத் தைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் எம்.டி. ஆனந்த், கதாநாயகன் ரிஷி ரித்விக், தயாரிப்பாளர் "தமிழ் தாய் கலைக் கூட'த்தின் எஸ். ராஜலிங்கம் கூட்டாகப் பேசியது...
கதாநாயகன் ரிஷி ரித்விக்
"அட்டு' படத்திற் குப்பிறகு இந்தப் படத்தில் நடிப் பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அப்படத்தின் உடல்மொழி இருக்கக் கூடாது. மேலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதால் காவல்துறையில் பணிபுரியும் என் அண்ணனுடன் எட்டு நாட்கள் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இப்படம் சமூக அக்கறை கொண்ட படம். நாயகி ஆஷா பாத்தலோமும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால், எங்கள் இருவருக்கும் காதல் காட்சிகளும் இருக்கின்றன.
இயக்குநர் எம்.டி. ஆனந்த்
இது எனக்கு முதல் படம். சைக்கோ திரில்லர் படம். ஒரு மனிதன் அதிகமான போதைக்கு அடிமையானால் என்ன விளைவு நடக்கும் என்பது தான் இப்படம். உண்மைச் சம்ப வங்களைதான் படமாக்கியிருக் கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பு என்பது சமூகம் கொடுக்கவேண்டுமா? அல்லது பெற்றோருடைய பொறுப்பா? ஏழையாக இருக்கும் குழந்தை தவறு செய்கிறது. வறுமை தான் தவறு செய்யத் தூண்டுகிறது என்ற கருத்தைக் கூறி யிருக்கிறோம்.
பெண்கள் குறிப் பாக, 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். ஆனால், சென்சாரில் 'ஆ' சான்றிதழ் கொடுத்திருக் கிறார்கள்.
எஸ். ராஜலிங்கம்
இதற்கு முன்புள்ள தலை முறை இளைஞன் எப்படி இருந்தான், இப்போதுள்ள இளைஞன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூறும் படம். இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல வுக்கு கொடுக்கும் பணத்தை எந்தமாதிரியான விஷயங் களுக்கு செலவு செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறிவிடு கிறார்கள். குழந்தைகள் பாதிப் பிற்கு ஆளாகும்போதுதான் தெரிகிறது. ஆகை யால், பெற்றோர் களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத் தும்விதமாக இப்படத்தை எடுத்திருக்கி றோம்.