""டிங்கு... டாங்கு... அவுந்து போச்சு ரிங்கு...

tinku

"ஹரஹர மஹாதேவஹி', "இருட்டு அறையில் முரட்டுக்குத்து' ஆகிய அடல்ட் காமெடி படங்கள் வரிசையில் சுடச்சுட தயாராகும் "யார் அந்த கருப்பு ஆடு?'

படத்தில் விஜய் டி.வி. புகழ் "ஜோடி நம்பர்1' வின்னர் சுனிதா கோகோய் சூடாக நடித்திருக்கிறார்.

Advertisment

இளம் தயாரிப்பாளர் விவன் எழுதி, தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் "யார் அந்த கருப்பு ஆடு?' ஜூலை மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படம் இப்போதைய தமிழ் சினிமா ட்ரெண்டான அடல்ட் காமெடி படங்களின் வரிசையில் புதிய சூட்டைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோஷியல் மீடியாவில் பரபரப்பாகப் பேசப்பட்ட "கரடி- ராஜா' பலான கதையை அடிப் படையாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் "ஜூலியைப் போட்டது யார்...?' "எ'னும் ப்ரோமோ பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இப்பாடலில் விஜய் தொலைக்காட்சியின் "ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சிமூலம் பிரபலமான சுனிதா கோகாய் சூடாக நடனமாடியிருக்கிறார். "டிங்கு டாங்கு டிங்கு... அவுந்து போச்சு ரிங்கு...'

என்று தொடங்குதாம் அந்தப் பாட்டு. (எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ) "எங்கேயும் எப்போதும்' இசையமைப்பா ளர் சி. சத்யா இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். பா. மீனாட்சி சுந்தரம் பாடலை எழுத, "மேயாத மான்' படத்தில் பிரபலமான "குத்துவிளக்கு' பாடலுக்கு நடனம் அமைத்த அபுதாஹிர் இப் பாடலுக்கும் நடனம் அமைத்திருக்கிறார்.

""இந்தப் படமும், இந்தப் பாட்டும் என்னுடைய திரைப்பட முயற்சியில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும்'' என்கிறார் சுனிதா கோகாய்...

Advertisment

ஒனக்கு நல்லாவே அமையும் ஆத்தா...

சையமைப்பாளர் பரணி எழுதி இயக்கியிருக்கும் "ஒண்டிக் கட்ட' வருகிற 20-ஆம் தேதி ரிலீசாகிறது.

"தெனாவட்டு', "குரங்கு கைல பூ மால', "எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார்.

""என் வாழ்கையின் திருப்புமுணை'' -நடிகர் கிரண் ஆர்யா

kiranrajநடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடித்து, அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு, மாபெரும் வெற்றிபெற்ற "ஒரு குப்பைக் கதை' படத்தில், வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண்ஆர்யா. அவர் என்ன சொல்றாருன்னா...

""தகடு என்ற தமிழ்ப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திரா ஐயாவின் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன்.

அப்போது என்னைப் பார்த்த இயக்குனர் காளிரங்கசாமி "ஒரு குப்பைக் கதை' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். என்னை நம்பி பெரிய கதாப்பாத்திரம் கொடுத்தார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று படம் வந்தபிறகு தெரிந்துகொண்டேன். "ஒரு குப்பைக் கதை' படத்திற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தர்.சி.யின் நந்தினி சீரியலிலில் நடிக்க ராஜ்கபூர் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். "ஒரு குப்பைக் கதை' என் சினிமா வாழ்கையில் பெரிய திருப்புமுனை. "இவன் செம்ம நடிகன்டா; இவன் நடிச்சா பாக்கலாம்' என்ற பெயர் மட்டும் எனக்கு போதும்.

""ரகுவரன் மாதிரி ஜெயிக்கவேண்டும்'' -நடிகர் மதுராஜ்

mathurajமெடிக்கல் துறையில் பிசியாக இருந்த மதுராஜை இயக்குநர் துரை கைப்பிடித்து இழுத்துவந்து "நேபாளி' படத்தில் லைன் புரடியூசர் என்கிற அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.

"எவனவன்' படத்தில் துப்பறியும் போலீஸ் வேடம். விஜய் சேதுபதி நடித்து பன்னீர்செல்வம் இயக்கிய "கருப்பன்' படத்திலும் நான் நடித்திருக்கிறேன் அடுத்து "அங்காடித் தெரு' மகேஷ் நடிக்க விஜய்மோகன் இயக்கும் படத்தில் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், இன்வஸ்டிகேசன் ஆபீசர் என மூன்று பரிமாண கேரக்டர். "கதாயுதம்' படத்தில் லீடிங் லாயர் வேடம்.

எனக்கு ஒரு ஆசை- ""ரகுவரன் மாதிரி எந்த கேரக்டர் கொடுத்தாலும் அப்படியே பொருந்திப் போகிறார் இந்த மதுராஜ் என்கிற பேர் எடுக்கணும். உள்ளூர் மாட்டுக்கு விலை இருக்குங்கிறத நிரூபிக்கணும்'' என்கிறார் மதுராஜ்.