கடந்த வாரம், ஓ போடு டான்ஸ் நடிகை விருமாண்டி நடிகர் மீது போலீசில் புகார் கொடுத்தார். டி.வி. சீரியல் ஒன்றில் நடிகையின் கன்னத்தில் அறையும் சீனில் நிஜமாக பளார்விட்டாராம் விருமாண்டி நடிகர். இதற்குமுன் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் இனிமேல் சேரலாமா என நூல்விட்டிருக்கிறார் நடிகர்.
ஆனால் நடிகையோ பழைய பாக்கி ஒண்ணு இருக்கே என வேறொரு நடிகையுடன் நடிகரை முடிச்சுப் போட்டுக் கேட்டிருக்கிறார். இந்தக் கடுப்பில்தான் ஒரிஜினலாக பளார்விட்டாராம் நடிகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்தக் களேபரத்தால் கிடைத்த விளம்பரத்தால், ஓ..போடு நடிகைக்கு புதுநட்பும் புது வசூலும் குவிகிறதாம்.